அறிவிருக்கா உனக்கு ?


அரசியல் வாதிகள் குறிப்பாய் ஜெயலலிதாவை பார்த்து கேட்க முடியாதவர்கள் வெட்கி தலைகுனியுங்கள்... தன் மனிதநேயத்தால் இறங்கிவந்து களத்தில் இறங்கிய இளையராஜாவை நீங்கள் பாராட்டவேண்டாம், தொல்லைகொடுத்து, மன உளைச்சல் கொடுக்காதீர்கள்.... அவர் இசை மேடைகளிலே கூட கோவப்படுபவர் ... அவர் சமூகத்தை பார்த்து கோவபடதான் செய்வார், வேஷம் போடதெரியாதவர். காரணம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை அரசியல் ஆதாயம் இல்லை... திறமை, தன்னம்பிக்கை உள்ளவர்களை கையாளும் விதம் தெரிந்திருக்கவேண்டும்... எல்லோரும் சகிப்புத்தன்மையோடு இருக்கவேண்டும் என்றே எதிர்ப்பார்ப்பது என்னை பொறுத்தவரை தவறே.... ஆராதிக்கவேண்டியவர்ககள் இக்கட்டில் மாட்டிவிட்டு விவாதிக்க விமர்சிக்க நினைப்பது அவர்களை சமூகத்தில் பங்கேற்க விடாமல் முடக்கிவைக்க முயற்சிக்கும் முயற்சியாய் நினைக்க தோன்றுகிறது...பத்திரிகை நண்பர்கள் இதோடு இந்த நிகழ்வை விடுவதுதான் சரியாக் இருக்கும்... நாம் நினைத்தால் இந்த சமூகத்தை மாற்றமுடியும் முயற்சிக்கிறோமா ? கண்முன் நடக்கும் அநீதிகளை எதிர்த்து பேராடியதுண்டா ? எத்தனை எத்தனை சட்டவிரோத நிகழ்வுகள் கண்டும் காணமல். மனசாட்சியோடுதான் அணைத்து பத்திரிகையாளரும் நடந்துக் கொள்கின்றனரா?...

கருத்துகள்