சிம்பு, அனுரூத்தை மட்டும் இப்படி விமர்சிப்பது ஏன் ?:



   தப்புன்னு உணராத ஜென்மங்கள் ... அந்த புள்ள என்ன தப்பு பண்ணுச்சி... ஆவேசமாய் அம்மா.. என் உயிரை எடுத்துக்கோங்க அழுகாச்சி...
உஷா மேடம் பிள்ளைக்கு அறிவுரை சொல்லுங்க முதல்லையே மன்னிப்பு கேட்டிருந்தா, இல்லை போலீஸி கமிஷனரிடம் விளக்கம் சொல்லி இருக்கலாம்... தப்பி ஏன் ? ஓட்டம்..
இதுவரை அவர் நாட்டுக்கு சிறந்த பாடல்களைத்தான் கொடுத்து கொண்டிருந்தாரா அதையும் சிந்தியுங்கள்...

சிம்பு, அனுரூத்தை மட்டும் இப்படி விமர்சிப்பது ஏன் ? மற்றவர்கள் எல்லாம் இப்படி எழுதலையா ?..
எல்லாரையும் நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன் அதே நிலைப்பாடுதான் வேறென்ன?
தினம் தினம் வன்புனச்சி சம்பவங்கள் கொடுமைகளும் நடக்குது ஆனால் நிருபையா விஷயம் மட்டுமே வெளியில் வந்தது.. மதத்தவங்களை ஏன் ? விட்டீர்கள் என்று கேட்பது நியாயம்தான்.. ஆனால் மீடியா பவர் அப்படி, மக்கள் ஒருசில நேரங்களில் வெடிக்கின்றனர் அது ஒட்டுமொத்த சகிப்பின் கலவையே ஒட்டுமொத்தமாய் மாட்டும் ஒரு சிலரிடமே காட்டமுடிகின்றது..
மக்கள் ஒட்டுமொத்தமா பொங்குறது காரணம் இதில் மட்டுமில்லை, இதிலும் கூட வாய்ப்பு கிடைத்தால் யார் முன்னெடுப்பது.. மக்களுக்கு வெறுப்பு மொத்தமாய் ஒருசில எக்டீம் நிலையில் தான்...
பெண்கள் மீது நேரடி தாக்குதல் இது .. பெண் அமைப்புகள் அணைத்து டிவி விளம்பரங்களுக்கும் பெண்கள் குழந்தைகள் சீரழிக்கப்படும் போதும் நீங்கள் இதே போல் போராடினால் நல்லது நாங்களும் துணை நிற்கின்றோம்... நீங்கள் அதையும் இந்த அளவுக்கு வீரியமாய் கொண்டு சென்றால் பெண்கள் மீதான தாக்குதல்கள் குறையும்...
( நம்ம பங்குக்கு சினிமா செய்திகள் போட்டாச்சி இல்லனா போராளின்னு ஒத்துக்மாட்டாங்களோ)
- கவிதை பூக்கள் பாலா

கருத்துகள்