பாரதி கண்ட புதுமை பெண்களை உருவாக்குவோம் ...


  இன்று பெண்களுக்கு நாம் சொல்லவருவது அனைத்திலும் ஓடி ஒளிந்தால் தான் இந்த உலகம் நம்மை விரட்டுது.. எதையும் எதிர்க்கொள்ளும் மனம் வேண்டும் என்ற கொள்கையோடு இருக்கவேண்டும் பெண்கள் .. அப்படியோ வளர்க்கவும் முயசிக்கவேண்டும்.
காரணம் இன்றைய நவீன தொழிநுட்ப உலகில் நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. நம் அனுமதி இன்றியே அணைத்து இடங்களிலும் நாம் கண்காணிக்க படுகின்றோம் புகைப்படமாகவும் வீடியோ பதிவாகவும் பதிவாகிக்விடுகின்றது..
மேடைகளில் சாதிக்கும், பரிசு வாங்குபவர்களும், சமூக நற்பணியில் ஈடுபடுயோர்களும், அனைத்திற்கும் கேட்கும் ஆதாரங்களும் , கேளிக்கைகள் , ரோட்டில் எப்போது யார் படம்பிடித்தார் என்றே தெரியாது அது பத்திரிகையிலே, ஊடகங்களிலோ வரும் போதே நாம் தெரிந்து கொள்கின்றோம். இதில் ஆண் என்றால் கொண்டாடுவதும், பெண் என்றால் தவிர்க்க சொல்வது சரியா ?
பயந்து ஒதுங்கும் பிள்ளைகளையே இந்த சமூகம் துரத்துகின்றது.. . இன்றைய தேவை எதையும் எதிர்க்கொள்ளும் தைரியம்.. யாரை இன்று விட்டு வைத்திருக்கு இந்த உலகம்.. சில நண்பர்கள், உறவினர்களே சுற்றி இருக்கும் சுற்றமும் கூட இன்று சரி இல்லை. அதற்காய் ஓடி ஒளிந்துக்கொள்ளமுடியுமா? இல்லை வெளியில் செல்லாமல் இருக்க முடியுமா ? ..
ஒருவேளை அவர் பொதுமேடைகள், பொதுவாழ்கையில் பரிச்சியமானவர் என்றால் எப்படி தவிர்க்க முடியும். விமர்சனங்களை தாண்டி தான் இன்று சாதிக்கும் நிலையில் உலகம், சமூக நிலை. அதற்கான மனநிலையோடு பெண்களை வளர்தெடுக்க வேண்டாமா? மாற்றாக ஓடி ஒளிந்துகொள் என்று வளர்தோம் என்றால் என்ன நடக்கும். பெண்கள் மீதான வன்முறைகள் வசை பேச்சுக்கள், பெண்ணடிமைத்தனம், தைரியமற்று யார் பின்னாடி ஒளிந்துக்கொள்ள தானே தோன்றும். மற்றும் இந்த நிலையும் தானே தொடரும் ...
என் கவிதைகளும் அப்படியே தான் இருக்கும்.. இனி பெண்கள் துணிந்து நின்றால் ஒழிய இதற்கு விடிவு இல்லை.. பெண்கள் கொஞ்சம் தமாதமாகவோ, ஏன்? பணி உயர்வு, அழகாக உடை உடுத்தினாலே, கொஞ்சம் வாய் பேசினாலே கூட தவறாகவும் எண்ணத்தில் சித்தரித்து நோக்கம் கற்பிக்கும் உலகம்..
இன்று எண்ணங்கள் மாறி இருக்கிறது, மாறவும் வேண்டும், தன்னை பற்றிய விமர்சனம் வரும் போது, தான் தெளிவாகவும், எதிர்த்து தைரியமாக பயணிக்கும் மனோ திடமும் இருக்க வேண்டும்.. அந்த குணம் வளர்ந்தால் தான் பெண்கள் தலைமை பொறுப்புக்கும், முன்னேற்றத்திற்கும் தைரியமாய் வர முடியும்..
இனி நம் வேலையே பெண்களிடம் தன்னம்பிக்கையும், தைரியத்தையும் வளர்தெடுப்பதே, ஓடி ஒளிவதை அல்ல தன்னை காத்துக்கொள்ளும் தைரியம் வளர்த்தெடுப்போம்.. பாரதி கண்ட புதுமை பெண்களை உருவாக்குவோம் ...... வன்கொடுமைகளை ஒழிக்க சமூகத்தை நல்ல விதமாய் சமத்துவத்தோடு கூடியதாய் படைக்க முயற்சிப்போம்..
ஆண் பெண் பேதத்தை தவிர்ப்போம் ..
வாழ்க பாரதம்...
- கவிதை பூக்கள் பாலா

கருத்துகள்