தற்கொலை தோல்வியின் முடிவல்ல....

தோழமைகளே!
எனக்காய் வேண்டாம் தற்கொலைகளை எதிர்ப்பதற்காக வேண்டி கொஞ்சம் நேரம் எடுத்து படித்து உங்கள் விவாதங்களை, கருத்துகளை வைக்கலாம்..நான் சிரம் தாழ்த்தி ஏற்பேன்.
ஒரு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்குறேன் தோழமைகளே !
இது ஒரு நண்பருக்கானதும், தோழமைகளும் என் நிலையை அறிந்து கொள்ளவும் இந்த பதிவு தேவைப்பட்டது.
முடிந்த வரை சுருக்கமா முடிச்சிடுறேன். ஒரு நண்பர் பெயர் வெளியிட விரும்பவில்லை, என் உள்டப்பாவில் வந்து நான் காதலில் தோல்வி அடைத்து மனவருத்தத்தில் இருக்கிறேன் எனக்காய் ஒரு கவிதை எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டார் .
நானும் சரி என்று தோல்விக்கான காரணம் கேட்டேன்.. காதலியின் பெற்றோர் சம்மதிக்க வில்லை அதனால் அவள் தற்கொலை செய்து கொண்டாள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்றுரைத்தார். எனக்கு மனம் பதப்பதைதது அந்த நண்பரை நினைத்து இரண்டாண்டுகள் கடந்து மறக்க இயலா இதய வலியை போக்க வேண்டும் என்று உடனே சரி என்று சொல்லிவிட்டேன் பெறுங்கள் , இரவுக்குள் கவிதை வடிப்பேன் என்றுசொன்னேன். முயன்று முயன்று இன்று வரை இயல வில்லை.......
காரணம் ஒன்றுதான் அவருக்கான முதல் கவிதை எழுதி பதிவிட்டேன் நீங்களும் படித்திருக்கலாம்
'' நான் நீயாகவேண்டும்,
தீயில் வீழ்ந்து எழ்வேன்
உனக்காய் தினமும்...
காச்சிய ஆயுதம் ஏந்தி
கடைந்து வடிப்பேன்
காவியம் ஒன்று காயம் கொள்ளாதே!
தோழமையே சாய்ந்துக்கொள்
உன்ரணங்கள் என் இதயம் படிக்கும்........
- கவிதை பூக்கள் பாலா'' இது தான் அந்த கவிதை...
பிறகு நான் முயன்று பாக்குறேன் வார்தைகள் அக்கினி குளியல் செய்கின்றது, எரிமலையாய் வெடிக்கிறது, வார்த்தைகள் கொடுங்கோல் செய்கிறது.... கூரியா ஆயுதம் ஏந்துகின்றது..... ஆறுதலாய் கவிதை கேட்டார், ஆனால் வந்து விழுவதோ அக்ரோசமாய் கோவத்தின் உச்சம் தொடுகின்றது.
நான் யார் மனதையும் புண்படுத்தும் எண்ணமில்லாதவன்...
கோவம் ,தன்னபிக்கை, ரோசம் அதிகம், ஆனால் வீந்து கிடப்போரை அணைத்து ஆறுதல் சொல்லவே விழைவேன். காயத்திற்கு மமருந்திடவே எண்ணுவேன் வேடிக்கை பார்க்க மாட்டேன் என்னிடம் கேட்டு விட்டால்.
என்ன நடந்ததுன்னு கேக்குறீங்களா?
அந்த நண்பருக்கும் இதை படிப்பவர்களுக்கும் , இனி காதலிக்கும் எண்ணமிருபவர்களுக்கும், காதலித்து கொண்டிருபவர்களுக்கும்.. சொல்லி கொள்வது..........
அந்த சகோதரி தற்கொலை செய்து கொண்டார் என்பது என் கோவதிற்கான காரணம் என்றுணர்ந்தேன். உண்மை முற்றிலும் உண்மை....
தற்கொலை கோழைகளின் கடைசி ஆயுதம்........... அவைகளை என் மனம் ஒருநாளும் மன்னிக்காது, ஏற்காது.
அந்த நண்பனுக்கு ஆறுதல் சொல்லவேண்டுமென்றால் முதலில் நான் அந்த பெண்ணை வாயார வசவுபாட வேண்டி இருக்கும். உண்மையாய் பாசம் வைத்த காதலன் மனம் அதை ஏற்குமா? .,
தன்னால் உதவி செய்ய முடியாவிட்டாலும் உபத்திரம் செய்ய கூடாது, இதுவே என்னிலைப்பாடு.
நண்பரே! என் மனமறிந்து நான் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்டதில்லை இது வரை. அது எப்போதும் அப்படிதான் .. நான் திமிர் பிடித்தவன் என்றும் கூட சிலர் சொல்லுகிறனர் . நான் கவலை கொள்ளேன்.
ஆனால் உன்னிடம் மனம் முவந்து மன்னிப்பு கேக்கிறேன் என்னை மன்னித்து விடு....... எனக்கு கவிதை வடிக்க தெரியவில்லை என்றும் நீ நினைத்திருக்கலாம் இல்லை உன்னை அவமதிக்கிறேன் என்றும் நினைத்திரிருக்கலாம். நான் உன்னை நன்றாங்க அந்த நிமிடமே உணர்ந்து கொண்டேன் .. வலிகளுக்கு மருந்தாக என் கவிதை இருக்கும் என்றால் ஓகே.. உன்னை காய படுத்திடுமோ என்ற தாயகத்திலேயே ....... மனதில் எழுதி எழுதி கிழித்தேரிந்தேன்....
காதல் செய்யுங்கள், கனிவோடு வாழுங்கள், ஒருபோதும் தயக்கத்தோடும், தன்னபிக்கை இல்லாமலும் , எதிர்த்து வெல்லும் திரனற்றும் போகாதீர்கள். பெற்றோர் சம்மதம் கொண்டா காதலித்தீர்கள்?, காதலித்த பிறகு பெற்றோரை சம்மதிக்க வைப்பதை பற்றி யோசிக்ககாமல் ஏன் இருக்குகின்றீர்கள்.
முயன்று சம்மதம் வாங்குங்கள், முதலில் உங்கள் காதலை யாரும் ஏற்க மறுக்கத்தான் செய்வார்கள் தனகொன்று வரும்போது அவரவர் நிலைப்பாடு மாறும். முதலில் உங்கள் காதலைபலப்படுத்துங்கள், உங்கள் இதயங்கள் இரண்டானாலும் உணர்வுகள் ஒன்றாய் இருக்கடும், ஒன்றாய் போராடுங்கள்....முடிவில் வெற்றியும் கிடைக்கும்.
அப்படி ஒரு வேலை முயன்று முடியவில்லை என்றால் உங்கள் கோழைத்தனத்தை நினைத்து வெக்கப்படுங்கள், முடிவெடுங்கள் பிரிந்திடுங்கள்.. வேவ்வேறு திசைகளை நோக்கி உங்கள் கோழைத் தனத்திற்கு நீங்கள் ஏற்கும் தண்டனையாய் நினைத்து வாழத்தொடங்குங்கள்.
இல்லை தனியாய் இருந்து கடைசி வரை போராடுங்கள். உயிருடன் இருந்து சாதித்தது காட்டுங்கள் நீங்கள் கோழைகளாகி.. எதிர்போரை வெற்றி கொள்ளவைக்கின்றீர்கள். வாழ பல வழிகள் உண்டு. வேறு திறமைகளில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள் வாழ்த்து காட்டுங்கள். அடுத்தவர்களுக்கு உதவியாய் மாற்றி கொள்ளுங்கள்.
தற்கொலை என்றும் முடிவல்ல அது ஒரு முட்டாள் தனம் ஒரு நிமிடம் வீரனாய் சக துணியும் நீங்கள், ஏன்? வாழ முயலவில்லை.. அந்த சகோதரிக்கு தன்னபிக்கை கொடுக்காமல் போனதில் நண்பருக்கும் மிகபெரியப்பங்குண்டு. உங்கள் மீதான நம்பிக்கையை வளர்க்க தவறிவிட்டீர்கள். உங்கள் காதலுக்கு தடையை இருந்ததை காலிட்டு மிதியுங்கள். உங்கள் வாழ்வை உயர்த்தி காட்டுங்கள், எதிர்த்தவர்கள் வெட்கித் தலைக்குனிவார்கள். விடுத்தது வாழ்க்கையை தொலைப்பது எவ்வகையில் நியாயம்.
வருவதும் போவதும் நம்மிடம் இல்லை.
''வந்ததும் போவதும் நம்மிடம் இல்லை ,
வாழும் இடமும் நமக்கு நிரந்தரமில்லை ,
உறவுகள் எல்லாம் காலத்தின் பகுதிகள் ,
அதில் உண்மையும் பொய்மையும்,
யாதென்று அறிய முடிவதும்மில்லை ,
நம்பிக்கை மட்டுமே வாழ்வின் உச்சம் ,
அப்படி அனைத்திலும் இருந்தால்,
சந்தோசம் என்றும் வாழ்வில் நிச்சயம் ..........
- கவிதை பூக்கள் பாலா ''
இதுவும் என் வரிகளே! நான் எப்பொழதும் நம்பிக்கை அளிப்பவனாய் இருப்பேனே ஒழிய, வீழ்த்துபவனாய், வீழ்பவனாய் இருப்பதில்லை.
என் நட்பில் இருக்கும் என் தோழமைகளும் சகோதரிகளும் , உறவுகளும் நம்பிக்கையோடு இருக்கவே விழைகின்றேன், முடிந்த வரை என்னால் மனம் வெறுத்தவரை நம்பிக்கை அளிக்கவே விரும்புகின்றேன்.
நீங்கள் இப்போது சாதித்தது என்ன ?
இரண்டாண்டுகள் ஆனா பின்பும் இப்படி தினம்தினம் செத்து மடிகின்றீர்கள் இதற்கு முயன்று வாழ்திருக்கலமே! ... சிந்தியுங்கள் இனியாவது உங்கள் வாழ்க்கை மாற்றங்களில் ஈடுபடுங்கள்....நண்பர்களே!
ஏன்?அப்படி கவிதை எழுத முடியாதா? நீங்கள் கவிதை எழுத தெரியாதவரா ? என்று வீண் விவாதம் செய்ய துணியும் நண்பர்களுக்கும் ஒன்ரைச் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
நான் உங்கள் மனக்காயத்திற்கு மருந்தாகவும் சந்தோசத்திற்கு சாமரம் வீசுபவனாகவும், வலிகளுக்கு ஆறுதலாகவும் இருக்கவே விரும்புகின்றேன். தற்கொலையை ஆதரித்தே , இல்லை தோல்விகளை முதன்மை படுத்தியோ எழுத மாட்டேன். வலிகளை உணர்த்துவேன், வழிகளையும் உணர்த்துவேன் அது தான் "கவிதை பூக்கள் பாலா" இங்கே என் மலர்கள் பல அவதாரம் எடுத்திருக்கும். தொடர்ந்து படிப்பவர்கள் உணர முடியும்..
நான் உணர்வுகளை மதிப்பவன் என் உணர்வுகள என்னை எழுதத் துண்டுகின்றது. என் சுற்றம் என் பார்வைகள் சுழன்றுகொண்டே இருக்கும் என் மனம் ரசிக்கும் வெறுக்கும், துடிக்கும், கண்டிக்கும் அனைத்தையும் பதிவிடுவேன் இங்கே.
ஆனால் நான் சினிமா, கற்பனை என்றால் அங்கே அந்த கதாபாத்திரம் உணர்வுகளை மட்டுமே உணர்த்த வேண்டும் அங்கே நான் எழுதினால் நிச்சயம் எல்லா விதமான எழுத்துகளும் எழுதுவேன் காரணம் அங்கே ஒரு உணர்வு காட்ட படுகின்றதுஅதில் ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை உணர்த்த வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆனால் அதிலும் நான் என் நம்பிகைகளை மட்டுமே விதைப்பேன் மீண்டு வருவதை மட்டுமே திரையிடுவேன். அதில் உறுதியாய் இருக்குறேன்.
நண்பர்களுக்காக இப்போது தான் எழுத ஆரம்பித்திருக்கேன்.. அவர்களிடம் கருவை அறிந்த பிறகே எழுதுகிறேன். அதனாலேயே இந்த தன்னிலை விளக்கப்பதிவு எனக்கு தேவைப் பட்டது.
தற்கொலை முடிவல்ல.. அது ஒரு கொடுமையின் தொடக்கமே.
வீழ்வது உடல்மட்டுமே.உன் உணர்வுகள் இங்கே பலரிடம் பலவிதமாய் பத்திரத்து போய் இருக்கும் அது உன்னை நாளும் வசப்பாடும், உயிரோடு இருந்தால் இன்று வீழ்தாலும் பின் எழுந்து நீயே அந்த காயங்களுக்கும் மருந்திடலாம்.
தற்கொலைகளை வெறுப்போம் , தலைநிமிர்ந்து வாழ்வோம். வாழ்க்கை நம் கையில்... ( அணைத்து தற்கொலைகளுக்கும் சேர்த்தே இந்த பதிவு)
- கவிதை பூக்கள் பாலா .

கருத்துகள்