ஆபாசம் என்பதும் , கவாச்சி என்பதும்...........

பாசம் என்பதும் , கவாச்சி என்பதும் வித்தியாசமான பொருள் கொண்டவையே ! . பெண்கள் , ஆண்கள் உடுத்தும் உடைகளை
யார் நிர்ணயம் செய்வது, அது அவர் அவர் மனதையும், குடும்ப
சூழ்நிலைகளும், சமூக சூழலுமே ஆகும்......

டுத்தவர் முகம் சுழிகாத வண்ணம் இருந்தால் நலமே !...
ஆனால், அதை நாம் முடிவு செய்ய முடியாது. அறிவுரை சொன்னதற்கே பொங்கும் உலகில் , என்னவென்பது பிடிக்கவில்லை என்றால் விட்டு விடவேண்டியது தான் , அவரை அவமானபடுத்துவது யாரையும் கோபப்பட வைப்பது சகஜமே !... அதை நாகரீகமாக சொல்லி இருந்தால் இன்றைய முகநூலில் நடத்து கொண்டிருக்கும் தனி நபர் தாக்குதல் ஒருவேளை இல்லாமல் போய் இருக்குகலாம் ...........

பெண்கள் உடுத்தும் உடை அடுத்தவர்கள் பார்ப்பார்கள் என்பது அறிந்தே, இடம் பொருள் அறிந்தும், அதனால்  அவர்களுக்கும், அந்த உடையால் அவர்கள் மீதான மதிப்பீடு என்ன என்பதும்  அவர்கள் புரிதலோடான விருப்பம் சம்பந்தப் பட்டது , அதை கேட்பதும், இல்லை தடுப்பதும், அவர்களுக்கு  உரிமையான உறவுகள் பார்த்துக்கொள்வார்கள்........... அதில் அவர்களுக்கும் பங்கிருக்கிறது .

இதுவே ! ஆண்களுக்கும் பொருந்தும் ............

பெண்ணியம் என்பதும் பெண் விடுதலை என்ன என்பதும், பெண் சுதந்திரம் எது என்பதும் இன்றைய பெண்களிடமே ஒருமித்த கருத்து இல்லை.....
கருத்து விவாதங்கள் வரவேற்கலாம் ......

தனி மனித சுதந்திரதிற்குள் சென்று தாக்குதல் நடத்துவது தவறு , மனித உரிமைமீறல் ஆகும்..... இது ஆணாக இருக்கும் பச்சத்தில் உடை சம்பந்தமான தாக்குதல் வந்திருக்குமா ? ....... விவாததிற்க்குரியதே!......

இன்று தாக்குதலுக்கும், வன்புணர்ச்சி, வன்கொடுமை இப்படி பாதிக்கப்படும் பெண்கள் பெருபான்மையானவர்கள் (ஒரு சில தவிர ) தைரியம் இல்ல முழுதாக மூடி இருக்கும் பள்ளி சிறுமிகளும், மனநலம் பதிக்கப் பட்டவர்கள், எதிர்க்க முடியா பலகீனமானவர்கள் தான் அவர்கள் இலக்ககாகின்றனர்.

பாசத்தை அருவருப்பை எதிர்க்க நினைபவர்கள் முதலில் நம் இல்லங்களுக்குள் புகுந்துவிட்ட டெலி சாப்பிங் என்ற பெயரில் நடக்கும் வியாபார விளம்பரங்களை எதிர்ப்போம் ........ அனைவரும் கைக்கோர்ப்போம்

அடிமைப் பட்டுகிடநத பெண்ணினம் இன்று கொஞ்சம் கொஞ்சமாய் சமூக சூழல் கல்வியால் சுய மரியாதையோடு கட்டுகளை உடைத்து சிறிது சிறிதாக விடுபட்டு கொண்டிருக்கும் காலம் ......... மாற்றங்கள் நிகழும்போதெல்லாம்
சில சகிப்பு தன்மைகள் தேவைப்படுகின்றது ......

நம் தாய், சகோதரியும், சக தோழிகள் என்ற பெண்ணினத்தோடே வாழ்க்கை பயணிக்கின்றோம் .......

பெண்களும் ஆண்களை எதிரியாய் எண்ணாமல் நாகரீகமான விவாதங்களோடே பயணிப்போம்..
- கவிதை பூக்கள் பாலா

கருத்துகள்