இ ப் ப டியும்  !!!
நடக்குதுங்கோ நாட்டுல நடக்குதுங்கோ பார்த்து நடதுகுங்கோ நண்பர்களே !

 
பேஸ்புக்கில் இணைவதை கவுரவமாக நினைத்து இணையும் பெண்கள் பலர் தங்கள் வாழ்க்கையையே தொலைத்து கண்ணீர் விடுகிறார்கள்.
 
பேஸ்புக்கில் அழகான பெண்களை பார்த்தால் இணையதளம் மூலம் அவர்களிடம் நைசாக பேசி ஆசை வலையில் வீழ்த்தி விடுகிறார்கள். ஆரம்பத்தில் நட்பில் தொடங்கும் இந்த பழக்கம் கடைசியில் கற்பில் சென்று முடிகிறது.
 
சென்னையைச் சேர்ந்த சுஜித்ரா என்ற பெண் வேலூரைச் சேர்ந்த ஆனந்த் பாபு என்பவருடன் பேஸ்புக் மூலம் நண்பரானார்.
 
ஆனந்த்பாபுவின் ஆசை வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவரது அழைப்பின் பேரில் வேலூருக்கு சென்று கற்பை பறி கொடுத்தார். இதுபற்றி சுஜித்ரா வேலூர் கூடுதல் எஸ்.பி.முருகேசனிடம் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி ஆனந்த் பாபு மற்றும் அவரது கூட்டாளி சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.
 
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஆனந்த்பாபுவின் நண்பர் திலீப். இவர் மரைன் என்ஜினீயரிங் படித்து விட்டு சிங்கப்பூரில் கப்பல் கம்பெனியில் வேலை பார்க்கிறார். விடுமுறையில் சொந்த ஊரான ராணிப்பேட்டைக்கு வந்தார். அப்போது ஆனந்த்பாபு பேஸ்புக் மூலம் பெண்களை வளைக்கும் வித்தையை சதீசுக்கு கற்றுக் கொடுத்தார்.
 
ஆனந்த்பாபு தான் ஏற்கனவே சுஜித்ரா என்ற பெண்ணை அழைத்து உல்லாசம் அனுபவித்து வருவது பற்றியும் தெரிவித்தார். அதன்படியே சதீசும் காயத்ரி என்ற பெண்ணை பேஸ்புக் மூலம் வீழ்த்தினார்.
 
காயத்ரி, சுஜித்ரா மட்டுமின்றி வேறு சில பெண்களையும் இந்த கும்பல் ருசித்தது. ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு கிழமை, நேரம் ஒதுக்கி ஊர் ஊராக வரவழைத்து உல்லாசம் அனுபவித்துள்ளனர்.
 
இந்த கும்பல் பேஸ்புக் மூலம் பெண்களின் பொருளாதார பின்னணி உள்ளிட்ட முழு விவரங்களையும் பெற்ற பிறகே தங்கள் திட்டத்தை அரங்கேற்றுகிறார்கள்.
 
லாட்ஜுகளுக்கு அழைத்து செல்லும்போது அறை வாடகை, ஆடம்பர செலவு உள்பட அனைத்து செலவுகளுக்கும் சம்பந்தப்பட்ட பெண்களிடமே பணத்தை கறந்து விடுகிறார்கள்.
 
எல்லா செலவுகளையும் செய்து கற்பையும் பறி கொடுத்து செல்லும் பெண்கள் மோசம் போய் விட்டோம் இனியாவது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
 
ஆனால் அந்த கும்பல் விடுவதில்லை. உல்லாசம் அனுபவிக்கும்போது ரகசியமாக வீடியோ படம் எடுத்து விடுகிறார்கள். அந்த படத்தை காட்டி மிரட்டியே ஏமாந்த பெண்களை மீண்டும் மீண்டும் அழைத்து பணத்தையும் கறந்து கற்பையும் சூறையாடுகிறார்கள். காயத்ரியும், சுஜித்ராவும் இவ்வாறு பலமுறை ஏமாந்துள்ளார்கள்.
 
ஆனந்த்பாபுவும், சதீசும் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு செகந்திராபாத்தில் ஒரு நட்சத்திர ஓட்டலில் பெண்களுடன் உல்லாசமாக இருந்தபோது போலீசில் சிக்கி ஜாமீனில் வெளி வந்துள்ளார்கள்.
 
காயத்ரி, சுஜித்ரா போன்று 16 பெண்கள் இந்த கும்பலிடம் சிக்கி கற்பை இழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்த லூயிஸ், சிங்கப்பூருக்கும், ஆனந்தராஜ் பெங்களூருக்கும் பெண்களை அழைத்து சென்றிருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர்களையும் மடக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கருத்துகள்