மீண்டும் துடைத்தெறிந்த மக்கள் அப்படி ஒரு கோவமா தெரியல சாமி


மீண்டும் அ தி.மு.க அமோக வெற்றி :

சென்னை: தமிழகத்தில், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 759 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல், கடந்த 17, 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக, பெரிய அளவில் வன்முறை ஏதுமின்றி நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, மாநிலம் முழுவதும் 822 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை துவங்கியது. தற்போதைய நிலவரப்படி சென்னை, திருச்சி, கோவை, மது‌‌‌ரை, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர், வேலூர் என 10 மாநகராட்சிகளையும் அ.தி.மு.க., மேயர்பதவியை பிடிக்கிறது.
கடலூர் , கிருஷ்ணகிரி, கரூர், கீழக்கரை, பத்மநாபபுரம், விருதுநகர், சாத்தூர், திருவள்ளூர், உடுமலை, , பெரியகுளம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஓசூர், தாம்பரம், மேட்டூர், உள்ளிட்ட 84 நகராட்சிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. ஆவடி, வேதாரண்யம், அரக்கோணம் நகராட்சிகளில் உட்பட 23 நகராட்சிகளில் தி,மு.க., வெற்றி பெற்றுள்ளது. நாகர்கோவில் உட்பட 2 நகராட்சிகளில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது .ம.தி.மு.க., ஒரு நகராட்சியிலும், சுயேட்சை 5 நகராட்சிகளிலும், சுயேட்சைகள் 5 நகராட்சிகளிலும் வெற்றி கிடைத்துள்ளது. நகராட்சி பேரூராட்சி மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் பெரும்பாலான இடங்களை அ.தி.மு.க,. கைப்பற்றி வருகிறது.

சென்னை தபால் ஓட்டு தே.மு.தி.கவுக்கு- 0 : சென்னை: சென்னை மாநகராட்சியில் முதலில் எண்ணப்பட்ட மொத்தம் 96 தபால் ஓட்டுக்களில் தி.மு.க.,வுக்கு 52, அ.தி.மு.க.,வுக்கு 35, காங்- 1 , பா.மக.,1 ம.தி.முக., 1, செல்லாதவை 6 தே.மு.தி.க.,வுக்கு ஒரு ஓட்டு கூட இல்லை.

சைதை துரைசாமிக்கு குவிந்த ஓட்டுக்கள்: சென்னை மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி 12,40,340 ஓட்டுகள் பெற்றுள்ளார். தி.மு.க. வேட்பாளர் மா. சுப்பிரமணியன் 7,20,593 ஓட்டுகள் பெற்றுள்ளார். இதன்மூலம், சைதை துரைசாமி 5,19,747 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தே.மு.தி.க., ஒரு நகராட்சியையாவது பிடிக்குமா? நடந்து முடிந்த தேர்தலில் மேயர் ஒரு நகராட்சி தலைவர் என எந்த ஒரு பதவியையும் பிடிக்க முடியாத நிலைக்கு தே.மு.தி.க., தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகரசபை தலைவர் கூடலூர் ( தேனி மாவட்டம்) மட்டும் கைப்பற்றியுள்ளது. தே.மு.தி.க., தனித்து நின்று தனது செல்வாக்கை நிரூபிக்க முடியாத நிலைதான் தற்போது. ‌இதனால் தே.மு..தி.க., தொண்டர்கள் விரக்தி அடைந்துள்ளனர். ம.தி.மு.க.,வுக்கு குளித்தலை (கரூர் மாவட்டம்) கிடைத்துள்ளது.


மதுரையில் அ.தி.மு.க., வெற்றி:துரை மாநகராடசியை 15 ஆண்டுகளுக்கு பின்னர் கைப்பற்றியது. அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ராஜன் செல்லப்பா 3,12,226 ஓட்டுகளும், தி.மு.க., வேட்பாளர் பாக்கியநாதன் 1,38,239 ஓட்டுகுளும் பெற்றனர். இதன்மூலம் அ.தி.மு.க வேட்பாளர் ராஜன் செல்லப்பா 1,73,987 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். .


திருப்பூர் மாநகராட்சி அ.தி.மு.க., வெற்றி: அ.தி.மு.க., வேட்பாளர் விசாலாட்சி, ஒரு லட்சத்து, 36 ஆறாயிரத்து 949ஓட்டுக்கள் பெற்றது தி.மு.க., வேட்பாளரை 77,669 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


தூத்துக்குடி மாநகராட்சி - சசிகலா வெற்றி : அ.தி.மு.க., வேட்பாளர் சசிகலா புஷ்பா ,ஓட்டு எண்ணிக்கையின் இறுதிச்சுற்றில் 65 ஆயிரத்து 50 ஓட்டுக்களும், தி.மு.க.,வேட்பாளர் பொன் இனியா 41 ஆயிரத்து 794 ஓட்டுக்களும், 3 வது இடத்தை பிடித்த ம.தி.மு.க., வேட்பாளர் பாத்திமா பாபு 29 ஆயிரத்து 336 ஓட்டுக்களும், தே.மு.தி.க.,வை சேர்ந்த ராஜேஸ்வரி 7 ஆயிரத்து 407 ஓட்டுக்கள் பெற்று 4 வது இடத்தையும் பெற்றனர். அ.தி.மு.க., வைசேர்ந்த சசிகலா 23 ஆயிரத்து 25 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கோவை மாநகராட்சியில் அபாரம்: கோவை மாநகராட்சியை அ.தி.மு.க., கைப்பற்றியது. அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட செ.ம.வேலுச்சாமி, 2,81,728 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கார்த்திக் 1,53816 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றார். இதனையடுத்து வேலுச்சாமி, 1,27,912 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வேலூர் மாநகராட்சி அ.தி.மு.க., வெற்றி : அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திகாயினி 98 ஆயிரத்து 888 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் . இவர் ஒரு லட்சத்து, 81 ஆயிரத்து 27 ஓட்டுக்களும், தி.மு.க., வேட்பாளர் ராஜேஸ்வரி, 82 ஆயிரத்து 119 ஒட்டுக்களும் பெற்றனர்.மொத்தமுள்ள 60 வார்டுகளில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 52 வார்டுகளில் அ.தி.மு.க., 23 வார்டுகளிலும், தி.மு.க., 15 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

திருச்சி நிலவரம் : திருச்சியில் மேயர் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயா 52,415 வாக்குகள் வித்தியாசத்தி்ல் வெற்றி பெற்றார். இவர்பெற்ற மொத்த வாக்குளின் எண்ணிக்கைஒரு லட்சத்து 61 ஆயிரத்து, 458. தி.மு.க.,சார்பில் போட்டியிட்ட விஜயா ஜெயராஜ் ஒருலட்சத்து ,09ஆயிரத்து ,043 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.


சேலத்தை கைப்பற்றியது அ.தி.மு.க.,: சேலம் மாநகராட்சியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சவுண்டப்பன்1,92,866 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்த படியாக தி.மு.க.,வின் கலையமுதன் 97,793ஒட்டுக்கள் பெற்று 95,073ஓட்டுக்கள் வி்த்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

திருநெல்வேலி மாநகராட்சி : அ.தி.மு.க., வேட்பாளர் விஜிலா 80265 ஓட்டுக்களும் தி.மு.க., வேட்பாளர் சுப. அமுதா 55681, ஓட்டுக்களும் பெற்றுள்ளனர். வித்தியாசம் 24584. விஜிலா வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஈரோடு மாநகராட்சியில் அ.தி.மு.க., வெற்றி: ஈரோடு மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க..,வின் மல்லிகா 105558 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதம் வாங்கிய அ.தி.மு.க., : இம்மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிகளை அதிமுக வேட்பாளர்கள் கைப்பற்றி உள்ளனர். கொடைக்கானல் நகராட்சி மன்ற ‌தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.எஸ்.கோவிந்தன் வெற்றி பெற்றுள்ளார். இதே போன்று நிலக்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சேகரும், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தண்டபாணியும், நத்தம் பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் விஜயலட்சுமியும், பண்ணைக்காடு பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சண்முகசுந்தரமும் வெற்றி பெற்றுள்ளனர்.

25 ஆண்டுகளாக காங்கிரஸ் தக்க வைத்திருந்தது: ராஜபாளையம் நகராட்சி தலைவர் வேட்பாளராக அ.தி.மு.க. வின் தனலெட்சுமி வெற்றி பெற்றார்.இவரை எதிர்த்து போட்டியிட்டகாங்கிரஸ் கட்சியின் சுப்புராம் தோல்வியுற்றார். தனலெட்சுமி, 34,769ஓட்டுக்கள் பெற்று 21741 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்நகராட்சியை கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ் தக்க வைத்திருந்தது. இப்போது அ.தி.மு.க. பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அதிகபட்சமாக சேலத்தில் 59, வேலூரில் 48, திண்டுக்கல் 41, விழுப்புரம், திருநெல்வேலி 40, சென்னையில் 18 ஓட்டு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்ட தேர்தலில், ஒரு கோடியே 68 லட்சத்து 518 பேரும், இரண்டாம் கட்ட தேர்தலில் ஒரு கோடியே 91 லட்சத்து 86 ஆயிரத்து 975 பேரும் ஓட்டளித்து உள்ளனர். தேர்தலில் பலமுனைபோட்டி நிலவியதால் வெற்றி யாருக்கு என்பதை கணிக்க முடியவில்லை. ஓட்டு எண்ணிக்கை மையங்களில்பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில தேர்தல் கமிஷன் செய்துள்ளது.

தேர்தல் முடிவுகளை வெளிப்படையாக வெளியிடுவதற்கு மேலும் பல அதிரடி உத்தரவுகளையும் மாநில தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது. இதனிடையே, ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது போன்று ஓட்டு எண்ணிக்கையும் அமைதியாக நடக்குமா என்ற சந்தேகம் தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க., உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு எழுந்துள்ளது.


சென்னை லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடியை பார்வையிட வந்த மாநில தேர்தல் கமிஷனர் அய்யரிடம் நிருபர்கள் இது குறித்து கேட்டபோது, "மாநிலம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கை விவரங்கள் வீடியோ பதிவும், வெப்-கேமரா மூலம் கண்காணிப்பும் செய்யப்படவுள்ளன. பத்திரிகையாளர்களுக்கு தகவல் அளிக்கும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை நேர்மையாகவும், சுதந்திரமாகவும், நியாயமாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. என்றார்.

கருத்துகள்

  1. அடப்பாவி அது துடை தெரிந்த மக்கள் இல்லை. துடைத்தெறிந்த மக்கள்.

    பதிலளிநீக்கு
  2. தல உங்க ப்ளாக் படித்துதான் எலக்குசன் அப்டேட்ஸ் தெரிந்துக்கொண்டேன்... கேப்டன் அவ்வளவுதானா...

    பதிலளிநீக்கு
  3. MANASAALI @
    தவறுக்கு மன்னிக்கவும் திருத்திட்டேன்,
    நன்றி வருகைக்கு

    பதிலளிநீக்கு
  4. Philosophy Prabhakaran @
    நன்றி வருகைக்கு பிரபா , கேப்டனுக்கு ஐந்து வருடம் கொஞ்சம் கஷ்ட காலம் தான் . இன்னும் என்ன என்ன காத்திருக்கோ ( அம்மாவின் அருளால் )

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக