யுத் பதிவர் சந்திப்பு ( என் அனுபவம் )

யுத் பதிவர் சந்திப்பு :
சென்னை, கே.கே.நகர் , முனுசாமி சாலையில் டிஸ்கவரி புக் சென்டர் முதல் மாடியில் 04.09 .2011 ஞாயிறு அன்று மாலை 6 .00 மணிக்கு நடைபெற்றது( அட நான் அப்பதான்பா போனேன் )..
நான் முதல் முறையா பதிவர் சந்திப்புக்கு போய் இருக்கேன் அப்பின்னு என்னாலையே நம்ப முடியல காரணம் பல வேலைகளுக்கு இடையில் கண்டிப்பாக போய்யே ஆகவேண்டும் என்ற முடிவோடு போய் சேர்ந்தேன் . முதலில் தயக்கமா தான் படி ஏறினேன் காரணம்துவரை யாருடனும் அறிமுகம் இல்லை , பேசியது , சாட் பண்ணது கூட இல்லை கமென்ட் போட்டிருப்பேன் அவ்வளவே !. பதிவுலகில் எனக்கு அறிந்த நபர் வால்பையனும் , ஈரோடு சசிகுமாரும் தான் . ஆனால் பாருங்க கதவை திறந்து உள்ளே போன உடனே பிலாசபி பிரபாகர் கண்டுபிடித்து விட்டார் வாங்க நீங்க ரெட்ஹில்ஸ் பாலா தானே! என்று கேட்டவுடன் ஒரு இன்ப அதிர்ச்சியோட கலந்த சந்தோசம் . உடன் என்னை சந்திப்புக்கு அழைப்பு விடுத்த சிவகுமாரும் புன்னகையுடன் உடன் இருந்தார் . பிறகுதான் பார்த்தேன் எதிர் பார்த்ததை விட அதிகமாகவே பதிவர்கள் வந்திருந்தனர் .

எல்லோரையும்
அறிமுகம் செய்து கொள்ள ஒவ்வொருவராக சென்று அவர்களுக்கு தோன்றியதையும் அவர்களை பற்றியும் சொல்லி வந்தமர்ந்தனர் . அனைத்தையும் என்னால் கேட்க முடிய வில்லை காரணம் அனைத்து பதிவர்களையும் ராகிங் செய்துகொண்டிருந்தனர் ....... என்முறை வந்த போது தயக்கம் ஏதும் இல்லை பதிவர்களை நினைத்துதான் பயம் காரணம் முதல் சந்திப்பு , பேச ஆரபித்தால் மனதில் தோன்றுவதை பேசி விடுவேன் . அதனால் பலமுறை பலசந்தர்பங்கள் தந்த பாடம் அதிகம் கொஞ்சபேருக்கு பிடிக்காம போய்டும் உண்மை சுடும் என்பது போல, அதிகம் பேசாதே! இந்த முறை என்ற எண்ணத்தோடு பேச சென்று என்னை பற்றியும் என் பதிவுகள் பற்றியோ யார் மனதிலும் பதிய வாய்ப்பே இருந்திருக்காது காரணம் என் மனதில் ஓடிய எண்ணங்கள் . வந்தமர்த்தவுடன் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தேன் .

பேச்சுகள்
மிகவும் ஜாலியாகவும் , விமர்சனம் , நையாண்டி , நக்கல்ஸ்சோட நகர்ந்தது , பிரபல பதிவர்கள் ( சீனியர் ஜூனியர் என்ற வேறுபாடு எல்லாம் வேண்டாம் என்று சொன்னார்கள் அதனால் ) பேசினார்கள் குறிப்பாக கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் , சுரேகா , யுவகிருஷ்ணன் மற்றவர்கள் மன்னிக்கவும் பேசியவை அனைத்தும் ஞாபகம் இருக்கு ஆனால் அவர்கள் பெயர்கள் ஞாபகம் இல்லை . நன்றாகவும் , நம்பிக்கையாகவும், நம்பும்படியும் , சில யதார்த்தங்களையும் அலசி ஆராய்ந்தனர். இப்போதைய பதிவர்கள் நிலை என்ன எப்படி போய்கொண்டிருகின்றது என்றொல்லாம் பேசப்பட்டது , நான் பேசி இருந்தாலும் பலபேர் பேசியதை தொகுத்ததாக இருந்திருக்கும் காரணம் அவ்வளவு ஆதங்கம் மனதில் ஓடிகொண்டிருந்தது . பிலாசபி பிரபாகர் , சிவகுமாரும் பேசும் படி சொன்னார்கள் ( கொஞ்சம் வற்புறுத்தவும் செய்தார்கள் ) மறுத்து விட்டேன் காரணம் அறிமுகமே இல்லாத நான் எதையாவது சொல்லி வைக்க அது பதிவர்கள் மனம் நோக செய்யுமோ என்ற எண்ணம் தான் . ஆனால் பிறகுதான் தெரிந்தது அவர் பிரபலமாவது புதியவராவது அனைவரையும் கலாயித்து கொண்டிருந்தனர்.


கேபிள்
சங்கர் அவர்களும் , ஜாக்கி சேகர் அவர்களும் உண்மையிலேயே ஜாலியான பதிவர்கள் தான் . இதில் கொஞ்சம் மாற்று கருத்தோடு சிவகுமார் மட்டும் பேசினார் ஆனால் கவனிக்கவேண்டிய கருத்தும் கூட , தனது சொந்த அனுபவத்தையும் சேர்த்தே சொன்னார். அவர் ஆதங்கம் புரிந்தது அதற்கும் பதிலும் அளிக்கப்பட்டது தாயகத்தை மறந்து விட்டு இலங்கையை பிரச்சணையை மட்டும் பெரிதாக எடுத்துகொள்வதை தான் ஆதங்கமாக வெளிபடுத்தினார்.


இடையே குடிக்க தண்ணீர் பாட்டல் தரப்பட்டது பிறகு சூடாக டீ கூட தந்தார்கள் பாவம் எந்த புள்ள செலவு செஞ்சுதோ தெரியல அவர்களுக்கு நன்றி ........ கடைசியாக அனைவரும் கலந்துரையாடல் போல் நடந்தது அதில் என் ஆதங்கத்தையும் அரசு அறிவித்த கல்வி கட்டணத்தை எந்த தனியார் பள்ளிகளும் வாங்குவதில்லை என்ற ஆதங்கமும் வெளிபடுத்தினேன் , பதிவர்கள் அதை அதிகம் கண்டுகொள்வதில்லை என்று பேசிகொண்டிருக்கும் போதே சபை வேக வேகமாக கலைந்தது நேரமாகிவிட்டது என்று நினைக்கிறேன். அதன் பிறகும் சென்னை உயர் நீதிமன்ற அட்வகேட் ( அட அவரும் பதிவர் தாங்க ) அவர்களுடனும் பேசினேன் கேபிள் சங்கர் , ஜாக்கி சேகர் , சிவகுமார் , இன்னும் சில நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன் . மனதிற்கு மிகவும் சந்தோசமாக இருந்தது சென்னை பதிவர்கள் சந்திப்பில் கலந்துகொண்டது . ...

பிலாசபி பிரபா கூட தான் போட்டோ எடுத்துகல ( அப்ப அவர் இல்லப்பா )

குறிப்பு : இரண்டு பெண் பதிவர்களும் கலந்து கொண்டனர் என்பது விசேஷம். அடுத்து யார்கிட்டையும் சொல்லிடாதீங்க பிலாசபி பிரபாகர் ஒரு சந்தேகத்தை என்னிடம் கேட்டார் நான் உங்களை எங்க வயது காரராக இருப்பீங்கன்னு நினைச்சேன்னு சொன்னாரு ( அட 25 வயசுக்குள்ள ) அட நானும் யுத் தாங்க அப்படின்னு சொல்லி சமாளிச்சிட்டேன் . என்ன பிலாசபி பிரபாகர் கிட்ட சொல்லிட்டு கிளம்ப முடியல ( அட அவர அங்க காணோம் ) சிவகுமார் மற்றும் சில பதிவர்கள் இடமும் அடுத்த பதிவர் சந்திப்புல சந்திக்கலாமுன்னு சொல்லிட்டு கிழ இறங்கினா புக் செண்டர்ல இன்ப அதிர்ச்சி கேபிள் சங்கர் சார் அன்பா பிஸ்கட்டு சாப்பிட கொடுத்தாரு. அவருக்கும் நன்றி , இப்படியாக என் முதல் பதிவர் சந்துப்பு முடிந்து வீட்டுக்கு கிளப்பினேன் ........................ மக்கா ... .

கருத்துகள்

  1. //பிலாசபி பிரபா கூட தான் போட்டோ எடுத்துகல ( அப்ப அவர் இல்லப்பா )//

    அந்த ஆளு எங்க போனாருன்னு அவரே ஒரு பதிவு போடுவாரு. வைட் பண்ணுங்க.

    பதிலளிநீக்கு
  2. /புக் செண்டர்ல இன்ப அதிர்ச்சி கேபிள் சங்கர் சார் அன்பா பிஸ்கேட்டு சாப்பிட கொடுத்தாரு//

    நான் வாங்கி வச்ச பிஸ்கட் பாக்கட்டை சுட்டுட்டாருங்க!!

    பதிலளிநீக்கு
  3. ''அந்த ஆளு எங்க போனாருன்னு அவரே ஒரு பதிவு போடுவாரு. வைட் பண்ணுங்க.''

    நன்றி நண்பா !
    இதுக்கெல்லாமா பதிவு போடுவாரு பிரபா அப்ப அவரு பிரபல பதிவர் தான்

    பதிலளிநீக்கு
  4. ''நான் வாங்கி வச்ச பிஸ்கட் பாக்கட்டை சுட்டுட்டாருங்க!!

    சுட்டதா? அதான் ருசியா இருந்ததோ

    பதிலளிநீக்கு
  5. அடடா, நீங்க நம்ம ஏரியா ஆளா? இனிமே அடிக்கடி உங்க தளத்திற்கு நான் கண்டிப்பா வருவேன். அருமையா எழுதுறிங்க. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நன்றி நண்பரே ! தொடர்ந்து வாருங்கள் கொஞ்சம் கொட்டிட்டி அல்லது குட்டிட்டு போங்க

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக