'அதை' அறுத்து வந்த பெண்!

டாக்கா: பங்காளதேஷில் கற்பழிக்க முயன்றவனின் மர்மஉறுப்பை அறுத்து, கையில் எடுத்து, போலீசாரிடம் புகார் அளித்த பெண்ணால், பரபரப்பு ஏற்பட்டது.

பங்காளதேஷ் நாட்டின், டாக்காவில் உள்ள ஜஹலாகத்தி என்ற புறநகர் பகுதியை சேர்ந்த 40 வயதுள்ள பெண், அவரது வீட்டில் இரவில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை 40 வயது உள்ள ஒருவன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை கற்பழிக்க முயன்றுள்ளார்.

அப்போது, வீரமாக செயல்பட்ட அப்பெண் கையில் கிடைத்த கத்தியை கொண்டு, கற்பழிக்க வந்த நபரின் மர்மஉறுப்பை அறுத்துவிட்டார். இதில் வலிதாங்க முடியாத அந்த நபர் ஒடிவி்ட்டார். தான் அறுத்த உறுப்பை பிளாட்டிக் பையில் சுற்றிய அந்த பெண், ஜஹலாகத்தி போலீஸ் நிலையத்திற்கு சென்று, உறுப்பை காட்டி புகார் அளித்தார்.

மர்மஉறுப்பு அறுக்க நபர் 5 குழந்தைகளுக்கு தகப்பன், அறுத்த பெண் 3 குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது. கற்பழிக்க முயன்ற நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டார். குற்றவாளியின் காயம் குணமடைந்து, அவன் உடல்நலம் தேறிய உடன் கைது செய்யப்படுவான், என போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள்

  1. அய்யய்யோ...முதல் ‘நறுக்’ நானா?

    பதிலளிநீக்கு
  2. செங்கோவி #
    வருகைக்கு நன்றி நண்பரே!
    எதுக்கு பயம் நண்பரே ! விருப்பாமில்லாம தொட்ட இப்படித்தான் .............

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக