மக்களின் எழிச்சி மண்டியிட்டது மத்திய காங்கிரஸ் அரசு


மக்களின் உரிமையை அடக்கும் விதமாக நடந்து கொண்டு வரும் மத்திய அரசு அன்னா ஹசாரேவை கைது செய்து விட்டால் போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று நினைத்த மட மத்திய அரசு , இப்போது அதன் மூலம் மிக பெரிய பாடம் கற்று கொண்டிருகின்றது. இன்று அன்னா ஹசாரே கைது செய்தது குறித்து நேற்று நடந்து நாடாளுமன்ற அமளி காரணமாக இன்று பிரதமர் இறு அவைகளிலும் விளக்கம் அளித்தார் .

அதில் முன்னுக்கு பின் முரணான கருத்துகளையும் , டெல்லி போலீஸ்சார் நடந்து கொண்டது சரி என்ற போக்கிலும் பேசினார் . மீண்டும் எதிர் காட்சிகள் எதிர் குரல் கொடுத்தனர் . மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கின்றனர் என்றார் அருண் ஜேட்லி . உண்ணாவிரதம் இருப்பதற்கு முன்னதாகவே கைது செய்தது மட்டுமல்லாமல் தேவை அற்ற நிபந்தனைகளை விதித்து முடக்க பாத்திருகின்றனர். ஆனால் மக்கள் இன்று தெருவில் இரங்கி போராட துவங்கி விட்டனர் . ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் அன்னா ஹசாரே ஆதாரவு என்று இந்தியா முழுக்க மட்டும் அல்ல அமெரிக்க லண்டன் வாழ் இந்தியர்கள் மாணவர்களிடமும் ஆதரவும் ஊழலுக்கு எதிரான கோஷங்களும் வெளிபடுகின்றன.

இன்று மாலை மத்திய அரசு டெல்லி போலீசார் மூலம் பலமுறை பேச்சு நடத்தியும் அன்னா ஹசாரே சிறையில் இருந்து விடுதலை ஆக மறுத்து விட்டார் . நிபந்தனை அற்ற உண்ணாவிரத அனுமதி அளித்தால் மட்டுமே வெளியில் செல்ல முடியும் என்று திட்ட வட்டமாக தெரிவித்து விட்டத்தாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர் .

மக்களின் எழுச்சி மெய்சிலிர்க்க வைக்கின்றது, இது ஒரு மாதிரிதான் ஆனால் உண்மையான ஆதரவு கட்டு கட்காத நாட்டு மக்களின் ஒட்டு மொத்த ஆதரவையும் அன்னா ஹசாரே பெற்றிருகின்றார் . காரணம் நாட்டில் பெருக்கி கிடைக்கும் சகித்து கொள்ள முடியாத அரசியல் ஊழல் , லஞ்சம் இதன் மூலம் மிக பெரிய அளவில் மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருகின்றனர் அதன் வெளிப்பாடே இன்று அன்னா ஹசாரே அவர்களுக்கு கிடைத்திருக்கும் மிக பெரிய ஆதரவு . இனியும் மக்களை ஏமாற்ற நினைத்தால் கிடைக்க போடாது உங்களுக்கு அரசியலில் மிக பெரிய மரண அடி என்பதை எழுதி வைத்துகொள்ளுங்கள் .

இன்று நாடாளுமன்றத்தில் பேசிய தி.மு.க. எம்.பி . இளங்கோவனும் , திருச்சி சிவாவும் அன்னா ஹசரேவுக்கு எதிராக பேசினார் . நாடாளுமன்றத்தை வெளியில் இருப்பவர்கள் நிபந்திக்க முடியாது அதை அனுமதிக்க கூடாதாம் . எந்த ஒரு தனி மனிதனும் அதை செய்ய முடியாது . என்பதை அறியாத சிறு பிள்ளைகளை போல் பேசி திரிகின்றனர் இந்த ஊழல்வாதிகள். அன்னா ஹசாரே மட்டும் உங்களை எதிர்கவில்லை ஒட்டு பொத்த இந்தியாவே எதிர்க்கின்றது .

நாடாளுமன்றம் என்பது என்ன தெரியுமா உங்களுக்கு மீண்டும் ஞாபக படுத்துகின்றோம் மக்களாகிய நாங்கள் உங்களை ஒட்டு போட்டு எங்கள் பிரதநிதியாகவே அனுப்பிஉள்ளோம் என்னமோ நாட்டளுமன்ரம் உங்கள் பாட்டன் . சொத்தை போல பேசுகின்றீர்கள் வெட்கமாக இல்லை . அது இருந்தால் இப்படி எனலாம் பேசி இருக்க மாட்டீர்கள். மக்களுக்காகவே நாடாளுமன்றம் தவிர நீங்கள் கொள்ளை அடிக்க அல்லது கூடி குமியடிக்க அல்ல . நினைவில் வைத்துகொள்ளுங்கள் . அது நீதி துறையோ அல்லது அரசு துறையோ உங்களை நிர்வாகம் செய்யவே நாங்கள் உங்களை நியமித்துள்ளோம் . எங்கள் வரி பணமே உங்கள் சம்பளம் செலவு ஆடம்பர பங்களா என்ன அளித்துள்ளோம் , நீங்கள் மக்களின் வேலைக்காரர்களே ! . மக்கள் தான் உங்களுக்கு எஜமானர்கள் தெரியுமா ? முட்டாள்களே ! .

முன்பை போல் அல்லாமல் மக்கள் இல்லை, புரிந்து கொள்ளுங்கள் அரசியல் முட்டாள்களே !

கருத்துகள்