அனுஷ்காவுக்குக் கல்யாணம்

கனவுகன்னிக்கு கல்யாணமுங்கோ!
எத்தன பேருடைய தூக்கத்த கெடுத்த அனுஷ்கா , இனி அதுக்கு ஒரு முடிவு கட்ட கழுத்த நீட்டுறான்கலாம் .........
சரி என்ன பண்றது எவ்வளவு நாளுதான் அவங்களையே ஜொள்ளு விடுவீங்க . இனி அடுத்த பிகருக்கு அலையை வேண்டியது தான் ............ பாவம் ரசிகர்கள் .........

தமிழ்,தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஓய்வின்றி நடித்துக் கொண்டிருக்கிறார் அனுஷ்கா.இரண்டு மொழிகளிலுமே ஏராளமான ரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழும் அவர் எல்லா ரசிகர்களும் அதிர்ச்சியடையும் வகையில் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார்.அவர் திருமணம் செய்யப்போவதும் ஒரு நடிகரைத்தான் என்று சொல்கிறார்கள்.நடிகர் என்றதும் பலரும் சிம்புவைத்தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று நினைப்பார்கள். ஆனால் மணமகன் சிம்பு இல்லையாம்.

நாகர்ஜூனாவின் மகன் நாகசைதன்யாதான் அனுஷ்காவின் மாப்பிள்ளை என்கிறார்கள்.அண்மையில் மிகநெருங்கிய வட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகக்கூட ஒரு பேச்சு இருக்கிறது.இதை மிகவும் ரகசியமாக வைத்திருக்கக் காரணம்?அனுஷ்காவுக்கு இப்போது இருக்கும் கமிட்மெண்ட்ஸ் எல்லாவற்றையும் சுமுகமாக முடித்துக்கொடுக்க வேண்டும் என்பதால்தானாம்.

திருமணத்துக்குப் பிறகு அவர் நடிப்பாரா?என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை.அதேசமயம்,அமலா பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் அவரைத் திருமணம் செய்த நாகார்ஜூனா,தொடர்ந்து அவர் நடிக்க அனுமதிக்கவில்லை.எனவே தந்தையைப் போலவே தனயனும் இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

கருத்துகள்