ஏமாற்ற நினைப்பது வெட்ககேடு:


கனிமொழி ஜாமீன் மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு :

வாசகர் கருத்துக்கள் :

நீதிமன்றத்தை ஏமாற்ற நினைப்பது வெட்ககேடு , ஜெயிலில் இருப்பதுதான் இவர்களுக்கு நல்லது.

ஆந்திராவிலிருந்துகுச்சிப்புடி நடனமாடிக்கொண்டு, பிழைப்புத் தேடிநாகபட்டினத்துக்கு வந்தகுடுகுடுப்பைக்கூட்டத்தைச் சேர்ந்ததெலுங்கு மொழி பேசும்முத்துவேல், அஞ்சுகம்தம்பதிகளுக்குநாகபட்டினத்தில்திருக்குவளை என்றஊரில் 1924 ஜூன்மூன்றாந் திகதி பிறந்ததட்ஷணாமூர்த்தி பின்னர்தன் பெயரை கருணாநிதிஎன மாற்றிக் கொண்டதைமறக்க முடியுமா? முதன்முறையாகமுத்துவேல் கருணாநிதிமுதல்வர் பதவியில்அமர்ந்திருந்த போது, கருணாநிதிக்குபெருமளவில் உதவிசெய்தஎன்.கே.டி.சுபிரமணியம்வெளியிட்ட ஜவகரிஸ்ட்பத்திரிகையில்சென்னையில் உள்ளமருத்துவமனை ஒன்றில்ஜனவரி முதலாந்திகதி ராசாத்தி என்கிறதர்மாம்பாளுக்கு பிறந்தகனிமொழி என்ற பெண்குழந்தையின் பிறப்புபதிவேட்டில் அந்த பெண்குழந்தை கனிமொழியின்தந்தையின் பெயர்மு.கருணாநிதி என்றுகுறிப்பிடப்பட்டிருக்கிறது. யார் அந்த கருணாநிதி? என்ற ஒரு சிறியசெய்தியைவெளியிட்டிருந்ததைமறக்க முடியுமா? ராசாத்திஎன்றழைக்கப்படும்தர்மாம்பாள் யார் என்றேதனக்கு தெரியாது; தனக்குஅப்படி எந்த பெண்குழந்தையும் இல்லை; என்று முதல்வர்முத்துவேல் கருணாநிதிஅறிவித்தார்.

ஒரு அதிகாரி நூறு ரூபாய் லஞ்சம் வாங்கினான் ! இதனைக் கேள்விப் பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்தில் பூந்து சோதனை பண்ணிக் கொண்டிருக்கும் போது அதிகாரி நூறு ரூபாயினை கையிலெடுத்து வாங்கியவனிடம் திருப்பிக் கொடுத்து மதியச் சாப்பாட்டிற்கு கடன் வாங்கியதாகவும் திரும்ப கடனை தீர்ப்பதாகவும் சொல்லிக் கொண்டு நின்றால் போலீஸ் என்ன செய்வான் ? நான் போலீசாக இருந்தால் பிடதியில் நாலு சாத்து சாத்தி கைகளில் விலங்கிட்டு போலீஸ் வேனில் தூக்கி விட்டெறிவேன் ! இவள் கருணாநிதி மகள் என்பதால் விசாரணை அமைப்புக்களை மேன்மையான நீதிமன்றத்தை படித்த இந் நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறாள் ! இவளுக்கு சிபிஐ விசாரணை சரிப்பட்டு வராது ! தமிழ்நாடு போலீசிடம் ஒப்படையுங்கள் ! 214 கோடிகளை மட்டும் கிடையாது தேசம் பறிகொடுத்த 176000000000000 லட்சம் கோடிகளையும் இவளிடமிருந்து வெளியே எடுக்க வைக்கிறோம் ! கம்ப்யூட்டர் நிறுவனம் கருவாட்டுக் கடைக்கு பணம் பரிமாற்றம் செய்ததாம் அதன் பின் கருவாட்டுக் கடை தொலைக் காட்சி நிறுவனத்திற்கு கடன் கொடுத்ததாம் ! என்ன கதை சொல்லுறா ?...இதை எப்படித்தான் படித்தவர்கள் காது கொடுத்து கேட்கிறார்களோ ?.... கருணாநிதி

ஆஹ்ஹா!!நல்லாபோத்திகிட்டுஉக்கந்திருக்காங்களே!!அடுத்துமுக்காடுதான்போடவேண்டும்.தீர்ப்பைசீக்கிரம் சொல்லிஅவர்கள் பீ பீ குறையுங்கள் கனம்கோர்ட்டார் அவர்களே!!!

ராஜாவை கைது செய்தவுடன், இனாமாக வாங்கிய 214C - க்கு, போலியாக கடன் வாங்கிய மாதிரி ஆவணங்கள்....... ஜகதல கில்லாடிகலப்பா.... வெட்கமே இல்லையா? கொஞ்சம் கூட மனசு உறுத்தல் இல்லை?....மானங்கெட்ட ஜென்மங்கள்.


இதெல்லாம் மாதிரிக்கு தான் இன்னும் நிறைய இருக்கு என்னத திட்டினாலும் அறிவிருக்க ( நூறு ருபாய் திருடுறவன் முகத்தை மறைக்கிறான் மானத்திற்கு பயந்து . இவங்க வெக்கமே இல்லமா பேட்டி வேற குடுக்குதுங்க என்ன கொடுமை சார் ........ ( அட அதொல்லாம் இருந்தா நானக்

செய்தி :
புது தில்லி, மே 30: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தில்லி உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.இந்த வழக்கு தொடர்பாக இவர்கள் இருவரும் ஏற்கெனவே தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் மே 20-ம் தேதி தள்ளுபடி செய்தது. இதை அடுத்து, இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 23-ம் தேதி இருவர் சார்பிலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 24-ம் தேதி நீதிபதி அஜித் பரிகோகே முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சிபிஐ பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பி, விசாரணையை மீண்டும் மே 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.அதன்படி ஜாமீன் குறித்த மனு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. கனிமொழி, சரத்குமார் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் அல்தாப் அகமது ஆஜரானார். "கனிமொழியும் சரத்குமாரும் விசாரணையின்போது முழு ஒத்துழைப்பு அளித்திருக்கிறார்கள். கலைஞர் டி.வி.க்கு கடனாகத்தான் தொகை பெறப்பட்டது. அதற்கான ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இருவரும் தவறு ஏதும் செய்யவில்லை. எனவே நீதிமன்றக் காவலில் இருக்கவேண்டிய அவசியமில்லை" என்று அல்தாப் அகமது வாதாடினார்."பணப் பரிமாற்றத்துக்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளீர்கள். ஆனால் அவை அனைத்தும் ஜெராக்ஸ் பிரதிகளாக உள்ளன. அசல் ஆவணங்கள் எங்கே?" என்று நீதிபதி கேட்டார்.அதற்கு பதிலளித்த அல்தாப் அகமது, அசல் ஆவணங்களை சரிபார்த்து வருகிறோம் என்றும் விரைவில் அவற்றை சமர்ப்பிக்க உள்ளோம் என்றும் நீதிபதியிடம் கூறினார்.அதன் பிறகு சிபிஐ சார்பில் யு.யு.லலித் ஆஜரானார். நீதிபதி முன் அவர் வைத்த வாதம் வருமாறு:"டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து குசேகாவ்ன், சினியுக் பிலிம்ஸ் நிறுவனங்கள் வழியாக கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி பணப் பரிமாற்றம் நடந்தது உண்மை. இதற்கு ஷாகித் பல்வாவும், வினோத் கோயங்காவும் உதவியாக இருந்திருக்கின்றனர். கைமாறிய பணம் லஞ்சப் பணம்தான். இந்தப் பணம் கொடுக்கப்பட்டபோது, அதற்கான ஆவணங்கள் எதுவும் தயாரிக்கப்படவில்லை. மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட பிறகுதான், இந்தத் தொகையை திரும்பச் செலுத்தத் தொடங்கியிருக்கின்றனர். இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்த பிறகுதான் கலைஞர் டிவி சார்பில் அவசர அவசரமாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. தொகையை கடனாகப் பெற்றதாகவும் அதைத் திரும்ப செலுத்தியதாகவும் ஆவணங்களை அவர்கள் தயாரித்திருக்கின்றனர். கலைஞர் டி.வி.யில் கனிமொழியும், சரத்குமாரும் தலா 20 சதவீதப் பங்குகளை கைவசம் வைத்துள்ளனர். இந்த பணப் பரிமாற்றத்தில் இருவருக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அவர்களின் கட்டுப்பாட்டில்தான் கலைஞர் டி.வி. இயங்கி வருகிறது. அவர்களது ஜாமீன் மனுக்களை தில்லி சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது. எனவே அந்த உத்தரவை உறுதி செய்து, அவர்களது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று லலித் கேட்டுக்கொண்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜித் பரிகோகே, ஜாமீன் மனுக்களின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.கனிமொழியின் தாயார் ராஜாத்தி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தமிழக முன்னாள் அமைச்சர் பூங்கோதை, திமுக எம்.பி.க்கள் வசந்தி ஸ்டான்லி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டவர்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

கருத்துகள்