சமச்சீர் கல்வி வரும் ஆனால் வராது ....

அரசின் அதிரடி முடிவு குழப்பத்தில் மக்கள் ஓர் ஆண்டாக முயற்சித்து அமல் படுத்த இருந்த சமச்சீர் கல்வி கைவிட பட்டதா ? அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டதா ? தெளிவில்லாத அரசு அறிக்கை முதல்வர் பேட்டி . சமசீர் கல்வி பற்றி பதில் அளிக்கும் போது முதல்வர் ஜெயலலிதா சொல்கிறார் . இதற்கொல்லாம் கால நிர்ணயம் செய்ய முடியாதாம் . அப்படி என்றால் சமச்சீர் கல்வி வரும் ஆனால் வராது .... அப்படிதானே அர்த்தம் . மாற்றமுடன் மேன்படுத்த பட்ட சமசீர் கல்வி அடுத்தாண்டு வரும் என்று அறிவிக்கை வெளியிடுங்களேன் ஏன் தயக்கம் ........
இதில் தான் சந்தேகம் வருகின்றது .


மெட்ரிக் பள்ளிகளின் தரம் ஆங்கிலம் மட்டுமே சிறந்ததாக இருக்கிறது காரணம் அவன் pre kg இருந்து ஆங்கிலம் படிக்கின்றான். அதில் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை ஆணித்தரமாக சொல்லுவேன் அரசு பள்ளிகளில் ஆங்கில அறிவும் சேர்த்து வளர்த்தால் கண்டிப்பாக எந்த சோர்வும் அரசு பள்ளி மாணவன் அட்டைய மாட்டான் . நீங்கள் அரசு பள்ளியில் படித்தவனிடம் வினவி பாருங்கள் அவன் தடு மாற்றமே ஆங்கிலம் தான் , அது மட்டுமே சரளமாக ஆங்கிலம் பேச முடியாததால் தான் அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் தாழ்வு மனப்பான்மை பெறுகின்றான் . மாணவனை விடுங்கள் பெற்றோர்களை எடுத்து கொள்ளுங்கள் அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் ஆங்கிலம் சரளமாக பேசுவான் என்ற நிலை ஏற்பட்டால் தானாக அரசு பள்ளிகளை நோக்கி மக்கள் பயண படுவார்கள் .


அனைவரும் சிந்தித்து பாருங்கள் அரசு ஆசிரியர்கள் தரத்தை குறை கூறும் முன் தனியார் ( ஒரு சில அதும் ஆரம்பம் இப்படித்தான்) பள்ளியில் படிக்கும் ஆசிரியர்கள் இடம் கேட்டு பாருங்கள் அரசு வேலை கொடுக்குறோம் வாருங்கள் என்று அடித்து பிடித்து ஓடுவார்கள் உண்மை காரணம் பணம் , அங்கே ஹயோ மெட்ரிக் பள்ளியில் தரம் தான் உயர்ந்தது இங்கேயே இருந்து விடுகிறேன் என்று யாரும் சொல்ல போவதில்லை . இன்றும் அர்பணிப்பு தன்மையோடு படம் நடத்தும் அரசு பள்ளிகள் இருக்கத்தான் செய்கின்றது . ஆசிரியர்களும் பயிற்சி முடித்தல் தான் அரசு பள்ளியில் வேலை அனால் பெருபான்மையான மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களின் கல்வி தகுதி என்ன என்று தெரியுமா ? அனைவரும் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் .

அதற்காக அரசு பள்ளி ஆசிரியர்கள் உண்மையாக நடந்து கொள்கின்றனர் என்ற அர்த்தம் இல்லை . தவறுகள் அதிகம் நடகின்றது எப்படி அரசு நிர்வாகம் சீரழிந்து உள்ளதோ அதேபோல் தான் கல்வி துறையும் . சீரான கண்காணிப்பு இல்லாததே முக்கி காரணம் , அடுத்து அவர்கள் செய்யும் தவறுகளை கண்டு பிடித்து பள்ளியின் தரன் குறைந்தால் சம்பள குறைப்பு , தகுதி உயர்வு தள்ளி போடுவது என்று கண்கானித்தால் கண்டிப்பாக சிறந்த கல்வியை தர முடியும் . வளரும் பருவத்திலிலேயே குழந்தைகளிடம் என்ற தாழ்வு வளர்க்கும் உங்கள் கல்வி முறையை மாற்றி ஒரே கல்வி முறையை அமல் படுத்துங்கள் சமசீர் கல்வி அது கடினமோ அல்லது தகுதியானதோ( குழந்தைகளுக்கு என்றதோ ) .

முதலில் மாற்றங்கள் வரும் போது பல இடர்பாடுகள் இருக்கத்தான் செய்யும் மனப்பாடம் செய்யும் கல்வியை தவிர்ருங்கள் புரிந்து படிக்கும் கல்வி முறையை அமல் படுத்துங்கள் . தனியார் எப்பட எதாவது காரணம் கிடைக்கும் எப்படி கொள்ளை அடிக்கலாம் என்று யோசித்து கொண்டே இருகின்றனர் . அவர்களை பொறுத்தவரை தனது கல்விதான் உயர்ந்தது கார்பரேட் கம்பனிகளை போல வியாபாரம் தான் 100 % செய்கின்றனர் . யாரும் கல்வி சேவை செய்ய அவர்கள் வரவில்லை என்பதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் .


மீண்டும் ஞாபக படுத்துகின்றேன் நீங்கள் என்னதான் கூப்பாடு போட்டாலும் ஜெயலலிதா அவர்கள் முடிவில் மாறமாட்டார்கள் அவர்கள் குணம் அப்படி . இப்போதும் நாங்கள் கேட்பது ஒன்று மட்டுமே பிள்ளைகளின் கல்வி சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று இருதிருக்காது . எதற்கு தயக்கம் இதை மேன்படுத்தி அடுத்த கல்வி ஆண்டில் மேன்படுத்த பட்ட சமசீர் கல்வி முறை அமல் படுத்துவோம் என்ற ஆணித்தரமான வாக்குறுதி கொடுங்கள் . சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆடரை வெளியிடுங்கள் நாங்கள் உங்களை நம்புகின்றோம் அதை விடுத்து மழுப்பலான பதிலை தரும் உங்களை பெற்றோர்கள் நம்ப தயாராக இல்லை . ஒட்டு போட்ட மக்களை பத்து தினங்களில் திணறடித்த பொறுமை ஜெயலலித்தாவையே சாரும் ........

இதில் ஆனந்த கூத்தாடுவது தனியார் மெட்ரிக் பள்ளி நிவாகிகள் . என்ன ஒரு அடாவடி தனமாக கல்வி கட்டணத்தை இப்பொழது வசுலிக்கின்றனர் . அவர்களுக்கு தெரியும் கழிவி கட்டணமும் குப்பை தொட்டிகுதான் போகும் என்று . ஒட்டு போட்ட அத்தனை பெற்றோர்களும் மனம் குமுறி வேதனையை அனுபவிக்க தொடக்கி விட்டனர் . நீங்கள் எந்த இலவசத்தை கொடுத்தான் இதை ஏமாற்ற முடியாது என்பதை அரசு நினைவில் கொள்ளவும் . பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை என்று உலரும் நீங்கள் கட்டண விவரம் தெரியாமல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை என்று ஏன் அறிவிக்க முடியவில்லை . ஏன் என்றால் அதில் உங்களுக்கு உடன் பாடு இல்லை தனியார் அடிக்கும் கொள்ளையை ஊக்கபடுத்தவே செய்துள்ளது உங்கள் நடவடிக்கை . நீவீர் வாழ்க . உமது அரசு வாழ்க . போட்டதின் பலனை அனுபவிக்க ஆரபித்து விட்டோம் . எங்கள் தலை எழுத்து ஒவ்வொரு முறையும் ஏமாற்ற படுகின்றோம் ..

கல்வி கட்டணத்தை முறை படுத்த ஏன் உங்களால் முடிய வில்லை . குறைத்த பட்சம் உயர்கல்விகளை போல்ளாவது அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஒரே கட்டணம் அமல் படுத்துங்கள் அவர்களுக்கு என்று 10 20 % சேர்க்கையை ஒதுக்குங்கள் . அரசு மனது வைத்தால் எந்த மாற்றமும் வரும் கல்வி மேன்படும் . ஆங்கில கல்வி அறிவு குறைவாலே மட்டும் தான் கிராம மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் தாழ்வு மனப்பான்மை அடைகின்றனர் என்பதை அனைவரும் மனதில் கொள்ளவும்

கருத்துகள்