கனிமொழியும் , சரத்குமாரும் கைது , அடுத்தது என்ன ?

எதிர் பார்த்து எதிர்பார்த்து அப்பா ஒருவழியா இன்று கனிமொழியும் , சரத்குமாரும் கைது செய்யப்பட்டனர் . இந்த கைது தொடர்ந்து தி.மு.க . அமைச்சரவை லிருந்து வெளியேறும் என்று யாரவது நினைத்தால் அது முட்டாள் தனமே !.


ஸ்பெக்ரம்
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் கலைஞர் டிவி இயக்குனர் சரத்குமார் இருவரது ஜாமீன் மனுக்களும் நிரகாரிக்கப்பட்டுள்ளதுடன், உடனடியாக இருவரையும் கைது செய்யும் படி டில்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தி.மு.க .மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுமா ! அப்படின்னு யாராவது கேட்டீங்கன்னா , அவங்களுக்கு நம்ம வடிவேளு பதில் சொல்லுவாரு எப்படி என்ன சின்ன புள்ள தனமா இருக்கு ? அட எங்க பில்டிங் அடிவாரமே இல்லாம இருக்குது . ஏதோ அத வச்சாவது கொஞ்சம் வீரப்ப இருப்போமில்ல !
தமிழகத்தில் மண்ணை கவ்வியதும் , எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காததால் ஏற்கனவே செத்த பாம்பான தி.மு.க . விடம் இருக்கும் ஒரே பிடிப்பு மத்திய அமைச்சர் பதவிகள் மட்டுமே !. அதையும் இழக்க தயாராக இருக்காது . காங்கிரஸ் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் துடைத்து விட்டு இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா என்று பேசும் .

தி.மு.காவின் பல்லை மட்டும் அல்ல அனைத்து வழிகளிலும் தப்பிக்க முடியாத அளவிற்கு தமிழக மக்கள் பெரிய ஆப்பு வைத்திருகின்றனர். அடுத்து தயாளம்மாள் , நீரா ராடிய எப்ப கைது என்ற பேச்சு இப்பொழுதே எழ ஆரபித்துள்ளது . நீதி மன்றமும் எந்த மட்டத்தில் இருந்தாலும் அவர்களை விசாரித்து நீதி மன்றத்தில் நிறுத்தவேண்டும் என்று கண்டிப்புடன் சாடியுள்ளது

கனிமொழி கைது பற்றி கலைஞ்சரிடம் கேட்டதற்கு மறுபடியும் பிஞ்ச முகத்த வச்சிக்கிட்டு சொன்னாரு பாருங்க ஒரு டைலாக் “உங்களுக்கு ஒரு பெண் இருந்து அவர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீர்களோ, அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன்”எங்க வீட்டு பொண்ணுகளா கோடி கோடியா கொள்ளை அடிச்சாங்க, என்னய்யா சொல்றாரு அப்படின்னா ? அவரு கொஞ்சம் ஆடி தான் போய் இருக்காரு அடுத்து தயாளு , அடுத்து கொலை வழக்குல நாம அஞ்சா நெஞ்சன் அழகிரி , சட்ட மன்ற கட்டிட ஊழல்ல ஸ்டாலின் , இப்படி குடும்பமே கைது ஜெயல்லு அப்படின்னு இருக்கும் போல .

ஆனால் பேரனுங்க கொஞ்சம் சந்தோசமாத்தான் இருக்காங்க போல , அவனுகளையும் எப்படியாவது இழுத்து விட்டுடனுன்னு கலைஞ்சர் குடும்பம் யோசிக்கராங்கலாம். முதல்ல 2 ஜி மேட்டர கின்டி விட்டதே முன்னாள் முதல்வர் பேரன்கள் மாறன் பிரதர்ஸ் தானே கேவம் இருக்கத்தானே செய்யும் ........

எல்லாதுக்கு முதல்ல பிளாஷ் நியூஸ் போடும் நாம மூடுவிழா காண போகும் கலைஞ்சர் டி.வியும் , சன் டி.வியும் . ஒரு நியூஸ் சையும் போடல அட என்ன ஒரு நேர்மை


இன்று நண்பகல், வெளியிடப்பட்ட இத்தீர்ப்பில், இருவரையும் கைது செய்து கஸ்டடியில் வைக்கும் படியும், நாளை காலை 10 மணிக்கு முன்பதாக மீண்டும் ஆஜர்படுத்தும் படி சி.பி.ஐ தலைமை நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார்.

எனினும் இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக கனிமொழியின் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

கருத்துகள்