என்னடா இந்த கலைஞ்சருக்கும் , தி.மு.க.விற்கும் வந்த சோதனை

கருத்து கணிப்புகளை பார்த்து கருணாநிதிக்கு தோல்வி பயம் வந்

துவிட்டது-விஜயகாந்த்.



பாவங்க கலைஞ்சரு, அவருக்கு என்ன பண்றதுன்னே தெரியல !
பணத்த குடுக்கலாமுன்னா , எலக்சன் கமிசன் வேற விட்டு குடையரானுங்க ..சரி இலவசமாவது நம்மள காபத்துமான்னு எதிர்பார்த்தாரு அதுக்கும் ஜெயலலிதா ஆப்பு வக்கிறாமாதிரி உனக்கு நான் சளைத்தவள் அல்ல அப்படின்னு அடிச்சி விட்டிருக்காரு இலவசத்த . சரி அவங்க டி.வி.லயாவது எதையாவது போட்டு பித்தலாட்டம் பண்ணி ஜெயக்கலாமுன்னு பார்த்த அதுவும் இப்ப முடியல கேப்டன் டி .வி. ஜெயா டி.வி.மற்றும் அவங்களால பாதிச்ச டி.வி அடிக்கற ஆப்ப திருப்பி அடிக்கறாங்க . சரி இந்த கருத்து கணிப்பவது ஏதாவது கைகுடுக்கும் அப்படின்னு பார்த்தா அது இன்னும் கொடுமையா போச்சி . 24 % மக்கள் தான் கலைஞ்சரா மறுபடியும் ஏத்துக்க ரெடியா இருக்காங்களாம் .

இப்ப தலைய பிச்சிகிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம எலக்சன் கமிசனை திட்டிகிட்டும் , விஜயகாந்த் அடிக்கிறாரு , அந்த அம்மா யாரையும் மதிக்க மாட்டேங்குது அங்க சொட்டை இங்க நொட்டை. என்னடா இந்த கலைஞ்சருக்கும் , தி.மு.க.விற்கும் வந்த சோதனை .

இத எல்லாம் விட காமெடி என்னன்னா நம்ம காமெடி பீஸ் அதாங்க வடிவேலு பரப்புரைல பண்ற காமெடி தாங்கல. நம்ம கோவில் கட்டி கும்பாபிஷேகம் பன்ன குஷ்பு ஹயோ , நாம தமிழின தலைவருக்கு தமிழ காப்பாத்த இந்த திலகத்த களத்து அதாங்க அவங்க கொள்கைய ( கொல்லைய ) அவங்க பேசுற தமிழ் கொக்க மக்கா கொஞ்ச நஞ்சம் இருக்கும் தமிழ இந்த எலக்சனோட ஆழக்குழி தோண்டி புதைக்காம விடமாட்டேன்னு திரியராங்கோ . எங்க கொள்கை பரப்பு தான் போய் சிகர் ஜெயில்ல கம்பிய எண்ணி கணக்கு பாடம் படிக்குதே ( அட அதாங்க நம்ம 2 ஜி புகழ் ராசாதான் ) . நம்ம அஞ்சா நெஞ்சன் பருப்பு ஒன்னும் தென் மாவட்டத்துல வேகலையாம். எலக்சன் கமிசன் ஒரே கெடுபிடியாம் புதுசா அவரு மேல கேஸ் எல்லாம் போடுறாங்களாம் வண்டிய செக்பன்றாங்கலாம் . அவருக்கு தலையே சுத்துதாம் உடனடியா மதுரை கலெக்டரை(சகாயம் ) மாத்தனுமாம்(அப்புறம் இவங்களுக்கு சகாயம் செய்யாம இருந்தா ) . இப்போதைய தகவல் அஞ்ச நெஞ்சன் மீதி மேலூர் கலெக்டரை தாக்கிய வழக்கு போட்டிருக்காங்களாம் . நாம கலைஞ்சருக்கு கண்ணில் இரத்த கண்ணீர் வருதாம். வராத பின்ன இவரு பிள்ளையாச்சே . அவரு தலைமைல நடந்த மதுரை தினகரன் அலுவலகம் மற்றும் மூன்று ஊழியர்களை எரித்து கொன்ன போது வலிக்காத மனது , மீனவன் பல நூறு பேர் சிங்கலவளால கொல்லப்பட்ட போது , பல லட்ச கணக்கான நம் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவித்த போது துடிக்காத உங்கள் மனது இப்போது வழக்கு போட்டதற்கே எப்படி தலைவரே துடிக்குது . இப்போதும் உங்கள் குடும்பத்தை காப்பாற்றவே மீண்டும் நீங்க முதல்வரா எப்படியாவது வந்திடனுன்னு துடிக்கிண்றீர்களே !
நீங்க பகுத்தறிவு வாதி என்று சொல்லிக்கொண்டு மஞ்சள் துண்டு போட்டு கொண்டு குலதெய்வ வழிபாடு செய்யும் உங்களுக்கே கடவுள் நம்பிக்கை இருக்குமென்றால் , தினம் தினம் வழிபாடும் தமிழ் மக்கள் நம்பிக்கை வீண்போகுமோ ! . அப்படி வீணானால் அந்த கடவுளும் கடவுளோ !
பொறுத்திருந்து பார்போம்......

மக்கள் : தலைவரே இதுக்கே இரத்த கண்ணீரா பொறுங்க மே 13 கழிச்சி ஏதாவது மஞ்ச துண்டு மகிமைல நடந்தா தான் உண்டு இல்ல 2 ஜி ரிசல்ட் வருதோ இல்லையோ உங்க குடுபத்துக்கே ஆப்பு காத்திருக்கு ரெடி ஆயிக்குங்க ........ இஷ்ட தெய்வம் , குல தெய்வம் எல்லாத்துக்கும் வேண்டிக்குங்க கப்பத்துராங்கலான்னு பார்க்கலாம் . .. ஒன்னு சொல்லணும் ஒரு குடும்பம் வேண்டுதலா அந்த சாமி கவனிக்குமா இல்ல பல கோடி தமிழ் நாட்டு மக்கள் வேண்டுதலை கவனிக்குமா பார்க்கலாம் கடவுளாவது லஞ்சம் ( சாரி ஊழல் ) வாங்காம இருக்கானு பார்ப்போம் ......

கருத்துகள்