இதுவல்லவோ உச்சகட்ட காமெடி.. ஐயோ முடியல ......

இலங்கைத் தூதரகம் முற்றுகை: கனிமொழி ம்பி கைது!

நல்ல இருக்கா போஸ் , போராட்டம் பன்ன போறேன் ஒரு ரிகர்சல் பாத்துக்கலாமா ?
நல்ல வரணுமில்ல சீன் எல்லாம் ...... அங்க போய் சொதப்பிட கூடாது . அப்பாவுக்கு வயசாயிடுச்சி கதை வசனம் இயக்கம் எல்லாம் அப்பாதான் வேஷம் கட்டறது மட்டும் நானு . என்ன இந்த முறை காமெடி படம் பண்ணலாமுன்னு தான் ட்ரை பண்றோம் .கண்டிப்பா வெற்றி பெறும் . மக்கள் விழுந்து விழுந்து சிரிப்பாங்க அதற்கு நான் உத்தரவாதம் தரேன். நகைசுவைக்கு பஞ்சமே வைக்கல நல்லா வந்திருக்கிறதா அப்பாவே சொன்னாரு , அப்பாவாலே சிரிப்ப கண்ரோல் பன்ன முடியலன்னா பாருங்களேன் .......

பாவம் மக்கள் விலைவாசி உயர்வு , எல்லா கட்டணங்களும் உயர்வு , இதுல வருசையா ஊழல் , கைது , மீனவன் கொலை , கொள்ளை இப்படியே கேள்வி பட்டு நொந்து போய் இருக்காங்க . அதான் கொஞ்சம் காமெடி பண்ணலாமேன்னு .............

செய்தி :
சென்னை: தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வரும் இலங்கை கடற்படையினரைக் கண்டித்து சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை திமுகவினர் முற்றுகையிட முயன்றனர். அப்போது திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை சிறைப் பிடிக்கப்பட்டனர்.

இலங்கைக் கடற்படையின் இந்தச் செயலைக் கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரியும் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதே போல மாநிலத்திலுள்ள அனைத்துத் துறைமுகங்கள் முன்பும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை உடனே விடுவிக்கக் கோரி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை திமுகவினர் முற்றுகையிட முயன்றனர். மைலாப்பூரில் இருந்து கனிமொழி தலைமையில் பேரணியாக புறப்பட்டு இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றபோது கனிமொழி எம்பி கைது செய்யப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை கடற்படை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரி இலங்கை அரசை மட்டுமல்லாமல் மத்திய அரசையும் முதல்வர் கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தாவிட்டால், எங்களது போராட்டம் மேலும் தீவிரமடையும்," என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநிலங்களை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஜெ.அன்பழகன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள்

  1. அப்படியே உள்ளே தள்ளி லாடம் கட்டச் சொல்லுங்க...

    பதிலளிநீக்கு
  2. Philosophy Prabhakaran @
    என்ன பிரபாகர் எந்த நாட்டுல இருக்கீங்க .....
    நீங்க யாருக்கு லாடம் காட்ட சொன்னீங்க .......

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக