நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த தரங்கெட்ட நிகழுவுகள் நடக்கையிலே ....

தொடரும் அவமான தற்கொலை நிகழ்வுகள் :
எழுத முயன்று யாரோ நெஞ்சில் சம்பட்டியால் அடித்தது போல் ஒரு வலி. என்ன நடக்குது இந்த நாட்டுல மனிதம் செத்து போனதோ ?.
அப்படி என்றால் என்ன ? என்று கேட்கும் நிலையில் நாம் அனைவரும் இருக்கிறோமோ என்ற அச்சம் நிலவுகிறது .

பணம் திருடப்பட்டதோ இல்லையோ அதற்குள் நான் பயணிக்கவில்லை .
ஒரு ரூ. 4000 காணவில்லை அல்லது களவாடப்பட்டது என்பற்காக இத்தகைய நடவடிக்கை எடுத்த ஆசிரியர் பெருந்தகையர் ( ஆசிரியைகள் ) , மாணவர்களிடமிருந்தும் , பெற்றவர்களிடம் இருந்தும், அவர்கள் இரத்தத்தை(பணத்தை) பள்ளி கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடித்த போது எங்கே போனீர்கள் . திருட்டு செய்தவர் யாராக இருந்தாலும் திருடர் தான் அதில் மாற்று கருத்தே இல்லை . ஆனால் விசாரணை என்ற பெயரில் அரசாங்கமும் , காவல்துறையும் , நிர்வாகங்களும் , பேங்க் அதிகாரிகள் , தனியார் நிறுவனங்கள்
செய்யும் மனித மீறல்கள் சகித்துக்கொள்ள முடியவில்லை.

சட்டமும் , நீதியும் ,தண்டனையும் , அவமானங்கள் , அசிங்கமும் , கெளரவம், கொள்கை , கோட்பாடு, சத்தியம் , தர்மம் , தன்மானம் , தலைகுனிவு , நெஞ்சு ஈரம் , இரக்கம் , மனிதாபிமானம் , கலாச்சாரம் , கட்டுப்பாடு, மனசாட்சி , மண்ணாங்கட்டி,
வாக்குறுதி , வாக்கு , நாக்கு , உறுதிமொழி ஹயோ !!! முச்சு திணறுது . இவைகள் எல்லாம் நடுத்தர மற்றும் ஏழைகளுக்காகவே பிறந்து வளர்ந்தவை(வளர்த்தவை).

விசாரணை என்ற பெயரில் நீங்கள் செய்யும் பாராபட்சம் , இதுவே ஒரு பணம் படைத்தவம் அதிகாரத்தில் இருப்பவன் பிள்ளை என்றால் இந்த இழி செயலை செய்திருப்பீர்களா ? .உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன் (உங்களுக்கெங்கே மனசாட்சி என்று ஒன்று இருந்திருத்தால் உங்கள் பிள்ளைகளாக நினைத்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா ?). வக்கர புத்தி எப்படி இன்று தாய்க்குலதிடம் வந்தது தாய்மை எங்கே போனது ! , கடவுளுக்கு ஈடான குரு(ஆசிரியர் ) எங்கே தொலைந்து போனார் . உங்களை நம்பி அனுப்பும் எங்கள் பிள்ளைகளின் நிலை என்ன ? .
அன்று
இலவச பள்ளிகள் நடத்தி நல்ல கல்வியையும் ஒழுக்கத்தையும் தந்தனர் . இன்று தலை கீழ் கொள்ளை அடிக்கும் கூடாரமாக கல்வி நிறுவனங்கள் மாறிய பிறகே இந்த விதமான கீழ்த்தர வக்கர புத்திகளும் அதிகரித்துள்ளது . பணம் ஒன்றே குறிக்கோள் , அப்புறம் எப்படி? உங்ககிட்ட படிக்கும் பிள்ளைக்கு உங்கள் மீதி மரியாதை வரும் .
கோடி கோடியாய் கொள்ளை அடிக்கும் அரசு அதிகாரிகளும் , அரசியல் வாதிகளும் மேல் சொன்ன எதுவும் இருப்பதாக தெரியவில்லை . அங்கேயும் 1000,
2000 லஞ்சம் வாங்குரவங்கத் தான் முகத்த மூடிகிட்டு அவமானப்பட்டு போறாங்க ( இதனால நான் லஞ்சம் வாங்குறது சரின்னு சொல்ல வரல) , மானம் அவமானம் இந்த எல்லாமே நடுத்தர ஏழைகளுக்கு மட்டுமே என்று எழுத படாத சட்டமாக இருக்கின்றது ( அவங்க மனசுல எழுதி வச்சிகிட்டாங்க ) .
தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தண்டிக்க பட வேண்டும் என்பதே என் விருப்பம் . சமமாக நடத்த வேண்டும் என்ற சமூக சிந்தனை வளர வேண்டும் .

அவமானம் என்ற ஒன்று ஒரு மாணவியின் உயிர் பலி வாங்கி இருக்கிறது. கொலை செய்பவனை விட அதற்கு தூண்டுபவனுக்கு தண்டனை அதிகம் என்று சட்டம் சொல்கிறது . ஆனால் அதே சட்டம் பணம் படைத்தவனுக்கு ஒன்றும் இல்லாதவனுக்கு ஒன்றுமாக நீதி வழங்குகின்றது . அவமானம் என்ற வார்த்தை பல உயிர்களை ( நடுத்தர & ஏழைகளின் ) பல நேரங்களில் பலி வாங்கி உள்ளது .
இதற்கு இயலாமையும் ஒரு காரணமாக அமைந்து விடுகின்றது . விதியே என் செய்வாய் ......... என்று மாறும் இந்த சமூகம் அவலங்கள் .
பாதிக்க ப்பட்ட ஆன்மாவிற்கும் , மாணவியை இழந்து வாடும் உறவுகளுக்கும்
ஆறுதலை மட்டுமே நம்மால் சொல்ல முடியும் .

sசென்னைei: சக மாணவியிடமிருந்து ரூ. 4000 பணத்தைத் திருடியதாக கூறி மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியின் உடைகளைக் களைந்து சோனையிட்டதால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக 4 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் நான்கு பேருக்கும் ஒரே நேரத்தில் நெஞ்சு வலி வந்ததால் நால்வரையும் மருத்துவமனையில் சேர்த்தனர் போலீஸார்.

சென்னை பெசன்ட்நகர், ஆல்காட்குப்பத்தை சேர்ந்தவர் கனகலிங்கம் (55). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் சாந்தி (50). இவர் பெசன்ட்நகர் ராஜாஜிபவன் மத்திய அரசு அலுவலகத்தில் துப்புறவுத் தொழிலாளியாக பணியாற்றினார். இவர்களது மூத்த மகள் திவ்யா (20).

தி்வ்யா, அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜானகி (முன்னாள் சத்யா ஸ்டூடியோ வளாகத்தில் உள்ளது) மகளிர் கல்லூரியில் பிகாம் 2வது ஆண்டு படித்து வந்தார். மிக மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் திவ்யா. குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

நன்கு படிக்கக் கூடிய மாணவியான அவர் வகுப்பில் முதல் மாணவியாகவும் திகழ்ந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் 29-ந் தேதி அன்று திவ்யாவோடு படிக்கும் சக மாணவியின் ரூ.4 ஆயிரம் பணம் திருட்டு போய்விட்டது. வகுப்பறையிலேயே இந்த திருட்டு நடந்ததால் ஆசிரியைகள் விசாரணை நடத்தினார்கள். மாணவி திவ்யா மீதும் சந்தேகப்பட்டு, ஆசிரியைகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதையடுத்து அன்று மாலை கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய திவ்யா, தனது தாயாரிடம் கதறி அழுதுள்ளார். ரூ.4 ஆயிரம் பணம் திருடியதாக திருட்டு பட்டம் கட்டி, எனது ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தி, ஆசிரியைகள் கல்லூரியில் அவமானப்படுத்திவிட்டார்கள். மற்ற மாணவிகள் என்னை கேலியாக பார்க்கிறார்கள். இனிமேல் எந்த முகத்தோடு நான் கல்லூரிக்கு போவேன் என்று கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த திவ்யாவின் தாயார், மகளைத் தேற்றி ஆறுதல் கூறியுள்ளார். அக்கம்பக்கத்தினரும் ஆறுதல் கூறியுள்ளனர். கல்லூரிக்கு வந்து நியாயம் கேட்பதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் அதை நிராகரித்த திவ்யா, யாரும் கல்லூரிக்கு வர வேண்டாம். மார்க்கில் கை வைத்து விடுவார்கள் என்று கூறி பயந்துள்ளார். இந்த நிலையில், திங்கள்கிழமை கல்லூரிக்கு வழக்கம் போல போனார் திவ்யா. அன்றும் அழுதபடி திரும்பினார்.

இந்த நிலையில், திவ்யாவின் தந்தை கனகலிங்கத்துக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் பார்த்துக் கொள்ள மனைவி சாந்தி உடன் இருந்தார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை கல்லூரியிலிருந்து திவ்யா தனது வீட்டுக்குள் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையிலிருந்து இரவு வீடு ன் சாந்தி இதைப் பார்த்து அலறினார். அக்கம்பக்கத்தினர் திரண்டனர். குப்பமே அதிர்ச்சியில் மூழ்கியது.

போலீஸார் விரைந்து வந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பரிசோதனைக்குப் பின்னர் மாணவியின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்போடு உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக திவ்யாவின் குடும்பத்தார், உறவினர்கள், ஆல்காட் குப்பத்தில் வசிக்கும் மீனவ சமுதாயத்தினர் திரண்டு வந்து கல்லூரியை முற்றுகையிட்டு பெரும் போராட்டத்தில் வேடும். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஆசிரியைகளைக் கைது செய்யக் கோரி அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். மாணவி திவ்யா படித்து வந்த வகுப்பு மாணவிகளும் விசாரிக்கப்பட்டனர். அதன் பின்னர் பேராசிரியை ஜெயலட்சுமி, உதவி பேராசிரியைகள் விஜயலட்சுமி, சுதா, செல்வி ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் நிறுத்தினர். நால்வரையும் 15 நாள் சிறைக் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து நால்வரையும் கோர்ட்டுக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அப்போது நான்கு பேரும் நெஞ்சு வலிப்பதாக கூறவே உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கல்லூரியில் பதட்டம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கல்லூரிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. தற்போது மேலும் 2 நாட்களுக்கு அதாவது நாளை வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

கருத்துகள்

  1. நண்பா... நானும் செய்திதாளில் படித்தேன்... சம்பந்தப்பட்ட ஆசிரியைகளை கடுமையாக தண்டிக்க வேண்டுமென்று தோன்றுகிறது...

    இதெல்லாம் விட இப்படி ஒரு நிகழ்வு நடக்காமல் கல்லூரியில் இருந்த யாராவது தடுத்திருக்கலாம்...

    பதிலளிநீக்கு
  2. Philosophy Prabhakaran @
    நண்பா,
    இன்று எல்லா மட்டத்திலும் பணம் இருந்தால் தப்பித்து கொள்ள முடிகின்றது , இந்த நிலையில் ஒரு வேடிக்கை ராஜா நிரபராதியாம் சிபிஐ தப்பு போல பாவம் ஒரு நிரபராதி கைது செய்யப்பட்டிருக்கிறார் ,
    சிரிப்பு தான் வருது . மக்களை எந்த அளவுக்கு கேனையனா இந்த அரசியல்வாதிங்க நினசிகிட்டு இருக்காங்க .........

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக