உசுப்பேத்தி உசுப்பேத்தி மக்களை ரணகளமாக்காதீர்கள் !!!.


இந்த மாதிரியான எழவெடுத்த விளம்பரங்கள் காட்சி ஊடகங்கள் , கமர்சியல் வெப் சைட்கள் தான் செய்யறாங்கன்னு பார்த்த , இந்த வியாதி ப்ளோக்ல நுழைந்திருக்கு ( ஒரு ப்ளோக்ல பார்த்தேன் , மன்னிக்கவும் ப்ளாக் பெயர்போட விரும்பல ) .

எல்லாத்துக்கும் சக்கரை போதுமென்றால் எதுக்கு உழைக்கணும் , எதுக்கு அரசாங்கம் , எதுக்கு கடவுள் கண்றாவி , ராணுவம் , வயதுக்கு சோறு , குழந்தை வேற கிடைக்குமாம் எச்சரிக்கை நண்பர்களே , இவர ராஜபக்சேவுக்கு
வசிய சக்கரை குடுத்து தமிழன காப்பாற்ற சொல்லுங்க, தமிழன் அவருக்கு கோயில் கட்டி கொண்டாடுவான் . எதுக்கு அடுத்த நாடு விசா பிரச்சணை இருக்க போகுது (அட அதுக்கும் ஏதாவது சக்கரை இருக்கும் கொஞ்சம் காசு அதிகமா இருக்குமோ) நம்ம நாட்டு மீனவன காப்பாத்துங்க .இல்ல தமிழன இலவசத்தில் இருந்து காப்பாற்றுங்கள் (கலைஞ்சர் குடும்பதுகிட்ட இருந்து தமிழ் நாட்ட). எதுக்குங்க அவ்வளவு பெருசா , விவாகரத்து நடக்காம , புரியாத நோய்களிலிருந்து, அட்லீஸ்ட் கொசுகளிடம் இருந்தாவது காப்பாற்றுங்கள்(சக்கரை கொடுத்துதான்) .........

கல்லு போட்டாங்க , வாஸ்து , ஜோசியம் , தாயத்து , இப்ப சாமி படம் போட்ட டாலர் , இப்படி மக்களின் நம்பிக்கையோட விளையாடும் கிழ்த்தரமான வியாபாரங்களை (பணம் சம்பாதிக்கும் உத்திகளை ) தயவு செய்து விடுங்கள் .
ஏற்கனவே இலவசம் , இலவசமுன்னு பாதி மயக்கம் , சரக்கு தட்டு பாடு இல்லாம குடிக்க , அட குடிச்சிட்டு ரோட்டுல விழுந்த கூட தவந்துகிட்டே போய் மட்டையாகும் வரை குடிக்கலாம் கடைஎல்லா இடங்களிலும் திறதிருக்கு . நிறைய பேர் பல மயக்கத்துல இருக்காங்க இதுல சக்கரை வேறவா பாஸ் .
ஏற்கனவே நிறைய பேர் இந்த வேலைய செய்யராங்கோ . பதிவுல போட்டு உசுப்பேத்தி உசுப்பேத்தி மக்களை ரணகளமாக்காதீர்கள் ..
நான் கடும் கண்டனம் தெரிவிக்கின்றேன் ........

வாந்தி : மக்கள் யோசிக்காத வரை இந்த மாதிரி விளம்பரங்களும் , அதை நம்பிஏமாறும் மக்களும் இருக்கத்தான் செய்வார்கள்....
...

கருத்துகள்

  1. நண்பா... நீங்கள் எந்த வலைப்பூவை குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்கு சரிவர புலப்படவில்லை... எனினும், நான் சில நாட்களுக்கு முன்பு ஒரு தளத்தில் இத்தகைய விளம்பரத்தை கண்டேன்... சம்பந்தப்பட்ட நபர் இத்தகைய விளம்பரங்களை நையாண்டி செய்துதான் எழுதியிருந்தாரே தவிர ஆதரித்து எழுதவில்லை... உங்களிடம் அந்த வலைப்பூவின் லிங்க் இருந்தால் மெயிலவும் :

    பதிலளிநீக்கு
  2. நண்பா, நான் அந்த வலைதளத்தை மட்டும் குறுப்பிடுவதென்றால் நேராகவே அந்த நண்பரின் பெயரை குறுபிட்டிருப்பேன் . பொதுவாக யாரும் இதை போல இனியாவது செய்யாதீர்கள் என்ற என் வேண்டுகோளை வைத்தேன் அவ்வளவே ! . நான் யாரையும் தனிப்பட்ட முறையில் சொல்ல வில்லை சொல்லவும் மாட்டேன். என்னுடை அழுத்தமான வேண்டுகோள் மூட நம்பிக்கையை வளர்க்காதீர்கள் !!!!!!!

    பதிலளிநீக்கு
  3. பிரபா, நீங்கள் இன்னொரு முறை நன்றாக படித்து பார்க்கவும்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக