கழிவறையில் பள்ளி மாணவி ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்தார்

எங்கே செல்கிறோம் ? , என்ன நடகின்றது என்று கூட அறியாத பெற்றோர்களா ? , ஆசிரியர்களா ? அல்லது பள்ளி தோழிகளா ? என்னே ஒரு கவனக்குறைவு எல்லோரிடமும் பிரதிபலிக்கின்றது .

+ 2 படிக்கும் ஒரு மாணவிக்கு என்ன நடந்தது , என்ன நடக்கும் என்று கூட அறியாதவளாக தான் இருந்தாளா ? அல்லது அறிந்தும் தவறு செய்தாலா ? எவ்வளவு கேள்விகள் மனதில் எழுகின்றது . காதல் என்ற மயக்கத்தில் ( இளம் வயது கேளாரில் ) நடந்தது என்ன ? . இதை முதலில் தடுத்திருக்க வேண்டும் , இல்லை பேசி மனம் முடித்திருக்க வேண்டும் , அல்லது குழந்தையை பெற்றெடுக்கும் தகுதியை பெற்றாளா என்பதை கூட பரிசோதிக்காமல் இருந்திருக்கும் அந்த பெண்ணின் குற்ற உணர்ச்சி , இவ்வளவு காலம் பட்ட வேதனை , நினைத்துப்பார்க்கவே கொடூரமாக இருக்கிறது .

இந்த
மன தைரியம் இருக்கும் பெண்ணிற்கு ஏன் ? திருமணம் முடிக்கும் தைரியம் இல்லாமல் போனது அல்லது போராட முடியாமல் போனது குற்ற உணர்ச்சி . புரிந்து கொள்ளுங்கள் பெற்றோர்களே ! இனியாவது குழந்தைகளை அரவணையுங்கள் தேவையை பூர்த்தி செய்யுங்கள் , முடியவில்லை என்றால் புரிய வையுங்கள். முதலில் பிள்ளைகளிடம் மனவிட்டு பேசுங்கள் சில விசயங்கள் தவறாக கூட இருக்கும் , உடனே கண்டிப்பதை விடுத்து புரிய வையுங்கள் அதான் தீமைகளை . அதை ஏற்றுக்கொள்ள நீங்கள் முன்னோடியாக இருங்கள் ! . முடிந்த வரை பிள்ளைகள் முன் சண்டை போடுவது , போய் சொல்லுவது , சிகரெட் பிடிப்பது , தண்ணி( சரக்கு ) அடிப்பது , இன்னும் பல பல தவறுகளை தவிர்ருங்கள் . அதுவே ஒரு நல்ல ஆரோக்கியமான மனம் படைத்த, தைரியம் நிறைந்த குழந்தைகளாய் உருவாக்கும் ..............


உளுந்தூர்பேட்டையில் அரசு மருத்துவமனை கழிவறையில் பள்ளி மாணவி ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

உளுந்தூர்பேட்டை தாலுகா சேந்தமங்கலம் காலனியைச் சேர்ந்த 17 வயது பெண், உளுந்தூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

வழக்கமாக வீட்டில் இருந்து பள்ளிக்கு பஸ்சில் வந்து செல்லும் இவர், புதன் கிழமை காலை பஸ்சில் உளுந்தூர்பேட்டைக்கு தோழிகளுடன் வந்து கொண்டிருந்தார். அவர் பஸ்சில் வரும்போதே திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் பள்ளிக்கு வந்து வகுப்பறையில் மயங்கி விழுந்தார்.

இதனால் ஆசிரியர்கள் அந்தப் பெண்ணை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வீட்டுக்குச் செல்லாமல் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அவருக்கு அளவுக்கு அதிகமான இடுப்பு வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் உடனடியாக புறநோயாளிகள் பகுதியில் உள்ள கழிவறைக்கு சென்று உள்புறமாக தாழிட்டுக்கொண்டுள்ளார். இச்செய்தி அறிந்த மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அந்த கழிவறையின் முன் கூடினர். பின்னர் 30 நிமிடங்கள் கழித்து கழிவறையின் கதவை உடைத்தனர்.

அப்போது அவருக்கு கழிவறையின் உள்ளேயே பிரசவம் ஏற்பட்டதும் அதில் அழகான ஆண் குழந்தை பிறந்ததும் தெரியவந்தது. பின்னர் அவரை மகப்பேறு அறைக்கு கொண்டு வந்தனர். அங்கு அந்தப் பெண்ணுக்கும், குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுசம்பந்தமாக அந்தப் பெண்ணிடம் விசாரித்ததில் இவருக்கும், உறவுக்கார வாலிபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டு அதன் மூலம் பரணி கர்ப்பமடைந்து குழந்தையை பெற்றெடுத்ததாக தெரிய வருகிறது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி உத்தரவின் பேரில் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள்

கருத்துரையிடுக