போர்க்குற்றவாளிகள் ராஜமரியாதையுடன் வந்து செல்ல பிரிட்டன் என்ன தமிழ்நாடா! - ஜூவி

இந்த தலைப்பு : ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியது . சிந்தித்து பாருங்கள் :
1 . கொலைகாரனும் , கொலைகாரனும் சேர்ந்து ஒன்றல்ல இரண்டல்ல பல ஆயிரம் உயிர்களை கொன்று குவித்துள்ளது . நண்பனின் ஆணையை ஏற்று சொன்னதையும் தாண்டி பல கொடூரங்களை நிகழ்த்திக்காட்டிய தோழனுக்கு சிவப்பு (இரத்த)கம்பள வரவேப்பு கொடுத்து தனது நன்றியை கட்டியுள்ளது காங்கிரஸ் தலைமை ( மத்திய அரசு ) அதற்கு வெண்சாமரம் வீசியது தமிழ் நாட்டு தி. மு .( தமிழ்நாட்டு அரசு ) .
2 . யாரும் எங்க நாட்டை வந்து பார்க்கலாம் எதவேனுமென்றாலும் ( எங்கள மட்டும் தனியா கவனிச்சிடனும் ). நாங்க உங்கள் அடிமை என்ற மன பாங்கு .
3. இதை எல்லாம் தட்டி கேக்காத மக்களை பெற்ற நாடு . ( அவன் மடியில கை வைக்காத வரை கொன்னே போட்டாலும் ஏன்னு கேட்க மாட்டோம் என்று முடிவெடுத்து விட்ட மக்கள் . ( பல விதத்தில் பிரித்து வைக்கபட்டிருக்கும் வரை இது தான் நிலை . அவன் தலையில் அடி விழாத வரை அவன் முழிக்க மாட்டான் . அவ்வளவு நிதானம் இழந்து மயக்கத்திலே வாழ்கிறான் )
4. பிரட்டன் நாடு மக்களுக்கு குரல்கொடுக்க உரிமை கொடுத்திருக்கு அவங்க உரிமைய போராடுறாங்க ...... நாங்களும் தான் போராடுவோம் எதற்கெல்லாம் தெரியுமா இலவசமா எதாவது குடுத்தா அவனுக்கு மட்டும் கொடுக்கலைனா , சரக்கு கிடைக்கலன்னா , சினிமா தியோட்டர் அவங்க தலைவரோட படம் போடைலைன்னா , இப்படி பல பல முக்கியமான விஷயத்திற்கெல்லாம் (அல்ப சந்தோசத்துக்காக ) மறியல் பண்ணுவோம் பாக்கலையா நீங்க . கட்டவுட்டுக்கொல்லாம் பாலபிசேகம் பண்ணுவோம் , கலை சேவை செய்பவர்களுக்கு கோவில் கட்டுவோம் அதற்கெல்லாம் எங்களுக்கு நேரம் இருக்குபா. என் சகோதரன் செத்த எனக்கென்ன நான் உரிறோட தானே இருக்கேன் . மீறி எவனாவது கேட்டால் சில ஆயிரம் கொடுத்து அப்படியே அமுக்கிட மாட்டங்க. நாங்களும் வாங்கிகிட்டு பல்ல இளிச்சிக்கிட்டு அவன் பின்னாடி கோசம் போட்டுக்கிட்டு போவோம் எங்க உணர்வு எப்படீ.... ..)
5. எங்க தொழில் வளர என்ன வென செய்வோம் ( அரசியல் , சினிமா இன்னும் எல்லாம் ) ஹயோ கொல்றங்கன்னு சொல்லுவோம் , உலக முக்கிய செய்தியா திரைப்படம் ரசிகர்கள் அலை மோதல் அப்படியின்னு அடிக்கடி போடுவோம் . ஆனால் அடி வயிறு பத்தி எரிந்தாலும் , ஒரு இனமே அழிந்தாலும் , ஒரு பிட்டு நியூஸ்( பிட்டு படம் இல்லங்க ) ஆகூட போட மாட்டோம் என்னே தொழில் தர்மம் . வாழ்க உங்க மகத்தான மீடியா பணி .......
6. ஒரு உயிரை கொன்னதற்க்கு லட்ச கணக்கில் கொன்று கொக்க்கலாமிட்ட தோழனுக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு தானே நடக்கும் .
7. தேடப்படும் குற்றவாளி அப்படின்னு தெரிந்தாலும் அவன் வெளி நாடா இருந்தா அல்லது வேண்டியவனா இருந்த கைது பண்ண மாட்டோம் ( மாறா பாதுகாப்போட வழி அனுப்பி வச்ச்ட்டு அவரு இங்க இப்ப இல்லன்னு டகால்டி கட்டுவோம் ). ஒருவன் தெரியாமல் பர்ஸ் அடிச்சிட்டாலோ ( அதுவும் தப்புதான் ) அவன இன்டர்நேஷனல் குற்றவாளி மாதிரி நடத்துறது .
8. 50, 500 இப்படி சில்றைய லஞ்சம் வாங்கினா உடனே பேப்பர் டிவி எல்லாம் கட்டுவோம் உடனே அரஸ்ட் ஜெயில் தான் . லட்சம் கோடி அடிச்ச மீடியா சிறப்பு நிகழ்ச்சி நடத்துவோம் . முடிஞ்ச டாக்டர் பட்டம் குடுப்போம் .
இதெப்படின்ன 500 ரூபாய்க்கு விபசாரம் பண்ண அழகி கைது அப்படின்னு சொல்லுவோம் . 50 லட்சம் வாங்கிக்கிட்டு விபசாரம் பண்ண ஹீரோயின் அப்படின்னு தலைமை ஏற்று பாராட்டி, பட்டமெல்லாம் கொடுப்போம் ( அவங்களும் அவரோட வொர்க் பண்ணது ரொம்ப சந்தோசமா இருந்ததுன்னு போட்டி வேற குடுக்கராங்கப்ப சாமீ )
9. நாங்க எங்க வீட்ட சுத்தி சாக்கடையே ஓடினாலும் மூக்க பிடிச்சுகிட்டு போவோமே தவிர தட்டி கேட்க மாட்டோம் . அப்புறம் வந்துட்டாங்க நாட்ட பத்தியும்........ எங்க கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேன்கறீங்க போங்க நீங்க ....
10.. இதையும் மீறி யாரவது வாய திறந்தால் போடா, கடா , குண்டா அப்படீன்னு எத்தன இருக்கு தூக்கி உள்ள போட்டுட மாட்டோம் .
எப்ப வேணா யாரு வேணா வந்து உங்க பெட்ரூம வென பாக்கலாம் அந்த அளவுக்கு சுதந்தரமான நாடு , நாங்க தான் சுதந்திரம் வாங்கிட்டோம்மில்ல ........

செய்தி :

Parklane Protest
சென்னை: போர்க் குற்றவாளிகள் எந்தவித நெருடலும் இல்லாமல் ராஜ மரியாதையுடன் வந்து செல்ல பிரிட்டன் ஒன்றும் இந்தியா அல்ல..., என்று கட்டுரை வெளியிட்டுள்ளது ஜூனியர் விகடன் இதழ்.

இலங்கை அதிபர் ராஜபக்சே சமீபத்தில் பிரிட்டனுக்கு சென்றார். ஆனால் பல்லாயிரம் தமிழர்கள் புலிக்கொடி தாங்கி அவருக்குக் காட்டிய எதிர்ப்பில் மிரண்டுபோய், கொழும்பு திரும்பிவிட்டார். அவரால் திட்டமிட்டபடி எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியவில்லை. தங்கியிருந்த ஹோட்டலிலேயே கிட்டத்தட்ட தமிழர்களால் சிறை வைக்கப்பட்ட நிலையில் தவித்தார்.

அந்த நேரம் பார்த்து, ராஜபக்சே மற்றும் அவரது ராணுவத்தின் கொடூர போர்க்குற்ற வீடியோக்களை சேனல் 4 தொலைக்காட்சி பிரிட்டனில் ஒளிபரப்ப, உடனடியாக ராஜபக்சேவை கைது செய்து விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என சர்வதேச சமூகமும் தமிழருடன் சேர்ந்து குரல் கொடுத்தது. தப்பித்து நாடு திரும்பினால் போதும் என்ற மன நிலையில், தன்னைக் கைது செய்துவிட வேண்டாம் என்று கெஞ்சியபடி கொழும்பு திரும்பினார்.

இதுகுறித்து ஜூனியர் விகடன் இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில், இலங்கை ராணுவத்தின் மிருகத்தனத்தையும் மிஞ்சிய படு மோசமான மனித உரிமை மீறலை, வீடியோவில் பார்த்த கொடூரங்களை வார்த்தைகளில் விவரித்துள்ளது.

மேலும் கூறுகையில், "இங்கிலாந்தில் உள்ள 'சேனல் 4’ சிங்கள அரசின் இனவெறிக் கொடூரங்களாக சமீபத்தில் ஒளிபரப்பிய இந்தக் காட்சிகள் உலகையே உலுக்கி இருக்கின்றன.

இலங்கை அதிபர் ராஜபக்சே லண்டனுக்கு வர ஆயத்தமான வேளையில், இந்தக் கொடூரக் காட்சிகளை அம்பலப்படுத்திய 'சேனல் 4’ தொலைக்காட்சி, ''ஈழத்தில் நடந்த கொடூரமான படுகொலைகள், கதற வைக்கும் கற்பழிப்புகள், உடலில் ஒட்டுத்துணிகூட இல்லாத அளவுக்குப் பெண் போராளிகளை நிர்வாணமாக்கி ரசித்திருக்கும் சிங்கள வெறித்தனங்கள் என நூற்றுக்கணக்கான காட்சிகளின் பதிவுகள் எங்களிடம் இருக்கின்றன. ஆனால், அவற்றைப் பார்ப்பதற்கான சக்தி இந்த உலகத்துக்குத்தான் இல்லை!'' என்று அறிவித்தது.

அதோடு, இனவெறியின் உச்சபட்சக் கொடூரமாக சிங்கள அதிகாரிகள் நடத்திய நெஞ்சு நடுங்க வைக்கும் அட்டூழியத்தை ஐந்து நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ பதிவாக உருவாக்கி, ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக் குழுவுக்கும் அனுப்பி இருக்கிறது 'சேனல் 4’.

ஈழப் போர் முடிவுக்கு வந்த காலத்தில் இருந்தே 'சேனல் 4’ தங்களுக்குக் கிடைத்த வீடியோ பதிவுகளையும், புகைப்பட ஆதாரங்களையும் தொடர்ந்து உலகின் பார்வைக்கு வெளிச்சமாக்கி வருகிறது. ''அந்தக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டவை!'' என ஆரம்பத்தில் மறுத்த சிங்கள அரசு, இப்போது ஒளிபரப்பாகும் அப்பட்டமான காட்சிகளைப் பார்த்து ஆடிப்போய் இருக்கிறது.

போர் நடந்தபோதும், ஆயிரமாயிரம் துயரங்களோடு போர் முடிவுக்கு வந்தபோதும் உலக நாடுகளும் ஐ.நா. சபையும் பாராமுகத்தை மட்டுமே பதிலாக்கின. ஆனால், 'சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகள் இப்போது இந்த உலகத்தைப் பதற வைக்கிறது.

இசைப்பிரியா சீரழித்துக் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகளைப் பார்த்த ஐ.நா. சபையின் சிறப்புப் பிரதிநிதியான கிறிஸ்டோபர் ஹேன்ஸ், ''இந்தக் கொடூரக் காட்சிகள் குறித்து உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும். கொடூரத்தை அரங்கேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!'' என வலியுறுத்தி இருக்கிறார்.

பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் சிங்கள இனவெறி மீறலை விசாரிக்கச் சொல்லி ஐ.நா-வை வற்புறுத்தி வருகின்றன.

இதற்கு மத்தியில் கடந்த 2-ம் தேதி பிரிட்டனில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றுவதற்காக லண்டனுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே சர்வதேசக் கண்டனங்களால் நடுங்கிப்போனார். போர்க் கொடூரக் காட்சிகளைப் பார்த்து உறைந்து போன பிரிட்டன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் ராஜபக்சே தங்கி இருந்த 'டோசெஸ்டர்’ ஹோட்டலை முற்றுகையிடவும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் ராஜபசேவின் உரையைப் புறக்கணிக்கவும் தயாரானார்கள்.

இதற்கிடையில், பிரிட்டனில் உள்ள சர்வதேச மன்னிப்பு சபை, ''பிரிட்டனிலேயே ராஜபக்சே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். ராணுவ அத்துமீறலை நடத்திய அனைவரையும் பிரிட்டனின் சர்வதேச சட்டங்களின் கீழ் விசாரிக்க வேண்டும்!'' என அறிவிக்க... பதறிப்போனார் ராஜபக்சே. இவ்வளவு எதிர்ப்புகளைப் பார்த்த பல்கலைக்கழகம், 'ராஜபக்சே உரையாற்ற வேண்டாம்!’ என அறிவிக்க... உடனடியாக ஹோட்டலுக்குத் திரும்பினார் ராஜபக்சே.

லண்டனில் இலங்கைத் தூதராக இருக்கும் அம்சா, (ஈழப் போர் நடந்த காலகட்டத்தில் இலங்கையின் துணைத் தூதராக சென்னையில் பணியாற்றிய அதே அம்சா.) தமிழகத்தில் செய்ததைப்போலவே லண்டனிலும் சில பத்திரிகையாளர்களைத் தன்வசமாக்கி ராஜபக்சேவின் விளக்கத்தை அறிவிக்க ஏற்பாடு செய்தார்.

ஆனால், 'சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகளுக்கு எவ்வித விளக்கத்தையும் கொடுக்க வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்த ராஜபரக்சே, அனைத்து மீடியாக்களையும் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார். 'ராஜபக்சே கைது செய்யப்படும் வரை போராட்டங்களைக் கைவிட மாட்டோம்!’ என பிரிட்டன் தமிழ்ப் பேரவையினரும் களமிறங்க... ராஜபக்சே பத்திரமாகக் கிளம்பிச் செல்ல தனி விமானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உயிரைக் கையில் பிடிக்காத குறையாக ராஜபக்சே இலங்கை சென்று சேர்ந்தார்.

எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ராஜ மரியாதையோடு வந்து போவதற்கு பிரிட்டன் என்ன... ஆறரை கோடி மறத் தமிழர்கள் வாழும் தமிழ்நாடா?!"

- இவ்வாறு அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

நன்றி: ஜூனியர் விகடன்

கருத்துகள்