கரு.பழனியப்பனின் புதிய ஏற்பாடு வலைப்பூ எழுத்தாளர்க­ளுக்கு வரவேற்பு

மிகப்பெரும் புத்தக சந்தையாக மாறி வருகிறது வலைப்பூ தளங்கள்! அரசியல், Karu.Palaniyappanசினிமா, இலக்கியம், நகைச்சுவை, மருத்துவம் என்று இங்கு எழுதப்படாத விஷயங்களே இல்லை என்கிற அளவுக்கு இங்கு கொட்டிக்கிடக்கிறது அறிவும் சிந்தனையும் அனுபவங்களும்.

சமூகத்தின் மிகப்பெரும் எழுத்தாளர்களாக கருதப்படும் மனுஷ்யபுத்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், ஞாநி, ஜெயமோகன், சாருநிவேதிதா உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்களும் தங்களுக்கென்று வலைப்பூ வைத்திருக்கிறார்கள். வலைப்பூக்களில் எழுதப்படும் விமர்சனங்கள் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிற அளவுக்கு வளர்ந்திருப்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

குறிப்பாக கேபிள் சங்கர், உண்மை தமிழன், அதிஷா, சிபிசெந்தில்குமார், தண்டோரா, பட்டர்ஃபிளை இன்னும் ஏராளமான வலைஞர்கள் எழுதுகிற விமர்சனங்களுக்கு பதிவுலகத்தில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இவர்கள் ஒரு படத்தை 'மொக்கை' என்று எழுதிவிட்டால், 'நீங்க சொல்லிட்டீங்க... டிக்கெட்டையே கிழிச்சு போட்டுட்டேன்' என்று பின்னு£ட்டம் எழுதி டைரக்டரையும் தயாரிப்பாளரையும் அதிர வைக்கிறார்கள் வாசகர்கள்.

இந்த நிலையில் இந்த வலைஞர்களுக்காக தனி ஷோ ஏற்பாடு செய்து புதிய அத்தியாயத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் கரு.பழனியப்பன். இவர் இயக்கிய 'மந்திரப்புன்னகை' படத்தின் பிரத்யேக காட்சி வலைப்பதிவர்களுக்காக திரையிடப்பட்டுள்ளது. ப்ரிவியூ தியேட்டர் ஒன்றில் திரண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட வலைப்பூ எழுத்தாளர்களை முன்னதாக வந்திருந்து வரவேற்றிருக்கிறார் கரு.பழனியப்பன். இந்த ஐம்பது பேரில் மிக முக்கியமான ஒருவரும் வந்திருந்தார். அவர்... எழுத்தளார் ஞாநி!

ஓ போடுறாரா பார்க்கலாம்...

கருத்துகள்