எந்திரன் .... என் பார்வை ( மட்டுமே ) .....


படத்தை பார்த்தாலே தெரியும் என்ன சொல்ல வருகிறேன் என்று . ஆம் . படம் முழுக்க ஆக்கரமிக்கறது ரஜினி மட்டுமே !
இதுவும் ரஜினி படமே !
என்ன பன்ச் டைலாக் இல்ல , அறிமுக பாடல் இல்ல , ஆனால் முழுக்க ரஜினியின் ஆதிக்கமே படத்தை கொண்டு செல்கிறது .
படம் முழுக்க சங்கரை காணோம் .
காரணம் ரஜினின் ஆளுமையே ! முதல்
அழகு பதுமையாக ஐஸ்வர்யா ராய் ( சில இடங்களில் வயது தெரிந்தாலும் அழகு பதுமையே ) தமிழ் படங்களில் தவறாமல் நடிகைகள் செய்யும் வேலையை செய்துவிட்டு போகிறார் கொஞ்சம் அழகாக எல்லோரும் சொல்வதுபோல் பிரமாண்டமாக . இசை புயல் பாவம அவரும் ஏமாற்றி உள்ளார் ( பாடல்களில் ) எ சென்டர் மட்டுமே ஒரு வேலை விரும்பலாம் . இதுதான் ஆஸ்கர் ஹலிவுட் லெவல் என்கிறார்களே ! நான் நினைச்சேன் ( இந்தியாவுல ) தமிழ் நாட்டுல தரத்தில் ஹலிவுட் லெவல் என்று சொன்னார்களோ என்று . அந்த தரத்திலும் இல்ல என்பது வேறு கதை .
ஒன்று மட்டும் புரிய வில்லை, எதற்காக இந்த ஆர்பாட்டம் பில்டப்புன்னு தெரியல . தமிழ்ல ஒரு படம் எடுத்தாங்க , எதற்காக இவ்வளவு பணம் செலவு செய்தார்கள் என்று மறுபடியும் சங்கர் யிடம் கேட்டு பாருங்கள் ! சரியான பதில் வராது காரணம் ஏன் என்று அவருக்கே தெரியும் . இந்த கதைக்கு இவ்வளவு செலவு தேவையா என்று அவர் மனசாட்சிக்கே விட்டு விடுவோம். படத்தில் போர் என்று எதை சொல்லலாம் விணான கிராபிக்ஸ் ஓவர் டோஸ் காட்சிகளே !!. திரை கதையில் சிறிய சிறிய ஓட்டை ( சிட்டி ஒரு ரோபோ ஓகே , அதற்கு கட்டளை இடும் சிப் வைக்கப்படுகிறது அதாவது ரோபோக்கு செய்முறை கட்டளை ஓகே , யோசிப்பதற்காக மேலும் ப்ரோக்ராம் மட்டுமே எழுதி இருக்கும், காதலிப்பது தெரிந்தால் அதை அகற்றி விடலாம் அல்லவா , பிறகு எதற்காக அதை அழிக்க நினைக்கிறார் ப்ரோபெர்சர் ரஜினி , அப்படி இல்லை தானாகவே யோசிக்கிறது என்றால் எதற்காக கடைசியில் ரெட் சிப் எடுத்து அதை நார்மல் ஆக்குகிறார் . கடைசி காட்சி ரொம்ப அபத்தம் , கிராபிக்ஸ் கட்சிகள் புரிந்து கொள்ளும் அறிவு ஜீவிகளாலே புரிந்து கொள்வது கடினம்( புரிதல் இல்லாத கிராபிக்ஸ் ). இன்னும் திரைகதையில் கவனம் சொலுத்தி இருக்கணும் . எதையும் யோசிக்காமல் பார்த்தால் முதல் பாதி ஓகே .இரண்டாவது சிட்டிய ( ரஜினி நடிப்பு ) தவிர அனைத்தும் என்ன சொல்ல டைரக்டர் சங்கரின் தீவிர ரசிகன் நான் என்னாலையே முடியல , அவருடை படங்கள் கண்டிப்பாக ஒரு மெசேஜ் சொல்லும் இப்படி நடந்தால் எப்படி இருக்கும் ( நன்றாக இருக்கும் ) என்று மக்களை யோசிக்க வைப்பார் . இந்த படத்தில் அனைத்தும் மிஸ்ஸிங் .
ரஜினியின் அசத்தலான நடிப்பு மட்டுமே படத்தை காப்பற்றி இருக்கு . யார் என்ன சொன்னாலும் அதை பற்றி கவலை இல்லை கண்ணை மூடிக்கொண்டு பாராட்ட முடியாது . எதற்காக இந்த ஆர்பாட்டம் பில்டப்புன்னு தெரியல . தமிழ்ல ஒரு படம் எடுத்தாங்க , எதற்காக இவ்வளவு பணம் செலவு செய்தார்கள் என்று மறுபடியும் சங்கர் யிடம் கேட்டு பாருங்கள் ! சரியான பதில் வராது. ......
இதனால் பலனடைந்தது என்னவோ சன் குடும்பம் மட்டுமே ! தமிழர்கள் விதத்தில் ஏமாற்றப் பட்டிருக்கின்றனர் . ஒன்று டிக்கெட் என்ற விதத்தில் , இதை கூட மன்னித்து விடலாம் . வரி சலுகை ( தமிழில் பெயர் வைத்தால் ) என்ற பெயரில் பல கோடி வரி ஏய்ப்பு ( பாவம் நலிந்த குடும்பத்தில் இருந்து தமிழ காபத்துறாங்க ) . நீயோ நானோ பத்து வரி கட்டலனாலும் கழுத்த நெறிச்சி வசூலிக்கும் அரசாங்கம் இப்படி கலை சேவை செய்கிறார்கள் ( இப்பொழுது சினிமா துறையில் ஆக்கிரமித்து உள்ளவர்கள் எல்லாம் சன்னும் , கலைஞ்சர் குடும்பம் மட்டுமே என்பது கூடுதல் தகவல் ).
நல்லது எதுவாக இருந்தாலும் பாராட்டுவோம் . தவறு என்றால் தைரியமாக வெளிபடுத்துவோம் , காரணம் அடுத்த முறை இதே தவறு செய்யாமல் இருக்க உதவும் ...........
----- பாலா மேலும்

கருத்துகள்