கோடியில் சம்பளம் வாங்கும் பிரபலங்கள் !!!

சாதாரணமா , பொண்ணு பாக்கும் போது மாப்பிள்ளை சம்பளம் எவ்வளவு வாங்குராருன்னு கோப்பங்க, நாமலும் பாந்தவ மாப்பிள்ளை IT ல வேலை பாக்கராருனு சொல்லி பண்ற லொள்ளு இருக்கே அப்பா சாமி தங்க முடியாது . ஒரு மூன்று லட்சம் வருடத்திற்கு வாங்கினாலே தல கால் புரியாது , அவன் பண்ற அலும்பல், காரணம் திடீர்னு அவனுக்கு எந்த கஷ்டமும் இல்லாம ( உடல் உழைப்பு இல்லாமல், மூளையை மட்டும் உபயோகித்து ) பணம் பார்ப்பதால் அவனுக்கு அப்படி ஒரு தலைகணன்னு தலைக்கு மேல புதுசா ஒன்னு முளைக்கும் , அவன் சம்பாதிக்கக அடிப்படையான கல்விய வேர்வ சிந்தி அவனுக்கு கொடுத்த பெற்றோர் அவனுக்கு இப்ப ரொம்ப ஏளனம தெரியுது , காரணம் திடீர் சம்பள பணம் இந்த எலவ எல்லாம் பெத்தவங்க சகிசிகிட்டு
( கவுரவத விட்டு கொடுக்காம!! அப்படின்னு நினைசிகிட்டு ) மாப்பிளைய வேலை பேசுவாங்க , எப்படி பொண்ணு வேலை பாக்கணும் , சம்பளம் என்கிட்டே கொடுத்திடனும் , காரு வேணும் , வீடு வேணும் , நகை கிலோ கணக்குல கேட்கறது . தயவு செய்து இந்த செய்தியை படித்து விட்டு உங்கள் சம்பளங்களை விகிதாச்சசம் பண்ணி பார்க்கவும் . உங்களுக்கே தலை சுற்றும் , பிறகு உங்கள் வரதச்சணை பட்டியலை தயார் செய்யவும் .
( நீங்க புலம்புவது புரிவுது மந்திரிங்க அவங்களுக்கு சம்பளம் அவங்களே உயர்த்தனாமாதிரி தான் இதுவும் அப்படினும் தானே எனக்கும் புரியுது ) தான் தான் அதிகம் சம்பதிக்கரோமுன்னு நினைக்கரவங்களுக்காக மட்டுமே ! இந்த பதிவு .

டெல்லி: அதிக சம்பளம் வாங்கும் சிஇஓக்கள் வரிசையில், சன்டிவி தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மாறன் ஆகியோரை சத்தமின்றி முந்தியுள்ளார் ஜின்டால் ஸ்டீல் அன்ட் பவர் குழும துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான நவீன் ஜின்டால்.

நடப்பு நிதியாண்டில் தலைமை செயலதிகாரிகள், நிறுவனத் தலைவர்கள் உள்ளிட்டோரின் சம்பளம் 80 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக நாட்டின் 25 முன்னணி தொழிலதிபர்களின் சம்பளம் பெருமளவில் உயர்ந்துள்ளது.

சிஇஓக்கள் எனப்படும் தலைமை செயலதிகாரிகளின் சம்பளமாக, ஒட்டுமொத்த லாபத்தில் 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிஇஓக்களுக்கு பெருமளவில் சம்பளம் தருவதை கட்டுப்படுத்த வேண்டும் என பிரதமர் [^] மன்மோகன் சிங் [^] முன்பு கூறியிருந்தார். இருப்பினும் நாட்டின் முன்னணி சிஇஓக்களுக்கு பெருமளவிலான ஊதிய உயர்வை அவர்களது நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

2009ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், 25 முன்னணி சிஓஓக்களுக்கும் கிட்டத்தட்ட ரூ. 442 கோடியை சம்பளமாக மட்டும் வழங்கியுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 9 சதவீதம் அதிகமாகும். அதேசமயம், அந்த நிறுவனங்களின் மொத்த லாப அளவு 6 சதவீதம் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் பொருளாதார சீர்குலைவுக்கு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து சிஇஓக்களுக்கு கணிசமான உயர்வை அவர்களின் நிறுவனங்கள் வழஹ்கியுள்ளன. இவர்களில் பாதிப்பேர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆவர்.

நவீன் ஜின்டால் முதலிடம்:

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 வயதாகும் இளம் எம்.பியான நவீன் ஜின்டால் 2009-10ம் ஆண்டில் சம்பளம், இதர சலுகைகள் போக ரூ. 39.7 கோடியை கமிஷன் என்ற பெயரில் பெற்றுள்ளார். அவர் கடந்த ஆண்டு சம்பளம் உள்பட மொத்தமாக பெற்றதொகை எவ்வளவு என்பது இன்னும் தெரியவில்லை. இருப்பினும் அவர் அதற்கு முந்தைய ஆண்டு ரூ. 48.6 கோடியைப் பெற்றார் என்பதால், அதை விட அதிகமாகவே கடந்த ஆண்டு அவர் பெற்றிருப்பார் என்பது உறுதி.

2வது இடத்திற்குத் தள்ளப்பட்டார் கலாநிதி:

கலாநிதி மாறன் பெற்ற சம்பளம் ரூ. 37.08 கோடியாகும். அவரது மனைவி காவேரி மாறனும் இதேதொகையை ஊதியமாக பெற்றுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே கலாநிதி மாறன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார் என்பது நினைவிருக்கலாம். அவருக்கு முன்பு ரிலையன்ஸ் அதிபர் [^] முகேஷ் அம்பானிதான் முதலிடத்தில் இருந்து வந்தார்.

முகேஷ் அம்பானி ரூ. 15 கோடி மட்டுமே:

2007-08ம் ஆண்டில் ரூ. 44 கோடி சம்பளம் மற்றும் இதர சலுகைகளாக தரப்பட்டது. ஆனால் அதன் பின்னர் சம்பளத்தைக் குறைத்துக் கொண்ட முகேஷ், ஆண்டுக்கு ரூ. 15 கோடியை மட்டுமே தற்போது சம்பளமாக பெற்று வருகிறார்.

தற்போது 3வது இடத்தில் ஹீரோ ஹோண்டா சிஇஓ பவன் முஞ்சால் இருக்கிறார். அவர் பெற்ற சம்பளம் ரூ. 30.88 கோடியாகும்.

மெட்ராஸ் சிமென்ட்ஸின் பி.ஆர்.ஆர் ராஜா பெற்ற சம்பளம் ரூ. 27.91கோடியாகும்.

கருத்துகள்