
சென்னை, மே 16- தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, இன்று மாலை புனித ஜார்ஜ் கோட்டைக்கு சென்று முதல்வர் பணிகளை கவனிக்கத் தொடங்கினார். ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம் உட்பட 7 கோப்புகளில் அவர் இன்று கையெழுத்திட்டார்.
ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி மற்றும் பரம ஏழைகளுக்கு 35 கிலோ இலவச அரிசி,
அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 6 மாதங்களாக அதிகரிப்பு,
பெண்களுக்கான திருமண உதவித்தொகை ரூ. 50,000 ஆக உயர்வு,
ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு 4 கிராம் இலவசத் தங்கம்,
மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கான நிவாரணத் தொகை ரூ. 2000 ஆக உயர்வு,
முதியோர் உதவித்தொகை ரூ. 1000 ஆக உயர்வு
ஆகிய 7 உத்தரவுகளில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.தமிழகத்தை இந்தியாவின் முதன்மையான மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதா தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக