முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது:
தற்போதைய சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் ஒட்டுமொத்த கல்வித் தரத்தையும் உயர்த்த வழிவகை செய்யாது என்பதால் அதை உயர்த்துவது குறித்து ஆய்வுசெய்வதற்கு வல்லுநர் குழு ஒன்றை அமைக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.எனவே இந்த கலவியாண்டில் பழைய பாடபுத்தகங்களையே பின்பற்றலாம் என்றும், புதிய பாட புத்தகங்களை அச்சிடுவதற்கு காலஅவகாசம் தேவை என்பதால் பள்ளிகளை ஜூன் 15 ஆம் தேதி திறக்கவும் அமைச்சரவை முடிவெடுத்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக